என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!
Jan 14, 2026, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டுவரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது தலைமைக்காக முதல்முறையாக விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழரான என்.சந்திரசேகரனின் அனுபவம் டாடா குழுமத்தை மேலும் வளர்ச்சியை நோக்கி தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை கொண்டிருக்கிறது டாடா குழுமம். ரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வளர்ச்சி பாதைக்குத் திரும்பியவர் யாரென்றால் டாடா சன்ஸின் தலைவரும், தமிழருமான என்.சந்திரசேகரன் தான்… அவரது பதவிக்காலத்தில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தடைகளைத் தாண்டிய வளர்ச்சியைப் பெற்றது.

ஒரு பக்கம் அதிகார மோதல் தலையெடுத்துள்ள நிலையில், நம்பிக்கை நட்சத்திரமான என்.சந்திரசேகரனின் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்து டாடா அறக்கட்டளை…. நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது டாடா குழுமத்தின் விதி.

அதே நேரத்தில் அப்பதவியில் இருக்கும் நபர் விருப்பப்பட்டால், 70 வயது வரை Non-executive பதவியில் தொடரலாம். இந்த முக்கியமான விதியைத் தளர்த்தி, என்.சந்திரசேகனுக்கு 3வது முறையாகப் பதவி நீட்டிப்பு வழங்கியிருக்கிறது டாடா அறக்கட்டளை.

டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே, செயலில் உள்ள தலைமைப் பதவிக்கு ஓய்வு விதியைத் தளர்த்துவது இதுவே முதல் முறை…. செப்டம்பர் மாதம் நடந்த டாடா அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்குப் பல்வேறு முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன… டாடா குழுமம் அடுத்த 30 ஆண்டுக்கான வளர்ச்சி பாதையைத் திட்டமிட்டுள்ள நிலையில், செமிகண்டக்டர், எலெக்ட்ரிக் வாகனப் பேட்டரிகள், ஏர் இந்தியா போன்ற முக்கிய திட்டங்களைக் கையாள தொடர்ச்சியான அனுபவம் மிக்கத் தலைவர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-இல் அனுபவமுள்ள என். சந்திரசேகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் டாடா சன்ஸ் குழுவில் சேர்ந்தார். 2017 ஜனவரியில் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு, 2022 பிப்ரவரியில் இரண்டாவது முறையாக ஐந்தாண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டது.

என்.சந்திரசேகரன் தலைமையில், டாடா குழுமம் கடந்த 5 ஆண்டுகளில் வருவாயைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது, நிகர லாபம், சந்தை மூலதனத்தை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.

செமிகண்டக்டர், மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பு மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கியமான திட்டங்களை, நிர்வாகத் தலைமை நேரடியாகப் பார்ப்பது அவசியம் என்று கருதப்பட்டது.

டாடா குழுமத்தின் மிகப்பெரிய திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள், செலவு அதிகரிப்பு அல்லது தவறான நடவடிக்கைகள் குழுவின் நம்பகத்தன்மை அல்லது நிதி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் . எனவேதான் என்.சந்திரசேகரனின் திறமை மற்றும் அனுபவத்தை இழக்க விரும்பாத டாடா குழுமம் அவரது பதவியை நீட்டித்துள்ளது.

Tags: tataN. Chandrasekaran's term extension: This has never happened in the Tata Groupடாடாஎன்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

Next Post

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies