இன்பநிதியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள அவர், பைசன் படம் வெளியான பிறகு தனுஷ் நடிப்பில் அடுத்த படத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்பநிதி மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இன்பநிதி திரைத்துறைக்கு வருவது உறுதியாகி உள்ளது. உதயநிதி கடைசியாக நடித்த மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான், இன்பநிதியின் முதல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.