தீபாவளி வசூல் வேட்டை உச்சம் - தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!
Oct 16, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி வசூல் வேட்டை உச்சம் – தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!

Web Desk by Web Desk
Oct 16, 2025, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் சார் பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமம் மற்றும் தடையில்லாச் சான்று வழங்குவதற்காக தீயணைப்புத் துறையினர் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தீயணைப்பு மீட்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல், திருவண்ணாமலை‌ வேட்டவலம் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்துள்ளதாகவும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், புதுக்கோட்டை பொதுப்பணித்துறை தெற்கு வெள்ளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், செயற்பொறியாளர் சண்முகவேலுவின் மேஜையில் இருந்து மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சார் பதிவாளரின் அறை மற்றும் கார்களிலிருந்து கணக்கில் வராத 72 ஆயிரத்து 100 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 1.88 லட்சம் ரூபாய் சிக்கியது. ரகசிய தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் மாவட்ட ஆய்வுகுழு அலுவலக ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கொண்ட குழுவினர் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில்வராத சோதனையில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 52 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாகியுள்ள அலுவலர் சக்திவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: deepavalianti-corruption departmentsub-registrar offices idiwali cash collectionAnti-Corruption Police officers raid
ShareTweetSendShare
Previous Post

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

Related News

மத்திய பிரதேசம் : மாசடைந்த கிணற்று நீரை பருகிய பலருக்கு உடல் உபாதை!

சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு!

ஈரோடு : தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ராஜஸ்தான் : கனரக லாரியும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் பலி!

தஞ்சாவூர் : 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்த ஆப்பிள் நிறுவனம் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கால்பந்து உலக கோப்பை தகுதி சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!

தூத்துக்குடி : சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை – பொதுமக்கள் கடும் சிரம்!

ரிதன்யாவின் செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

110-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொள்ளாச்சி ரயில் நிலையம்!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – தமிழ் பேரவை கோரிக்கை!

அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் விடுவிப்பு – இனிப்பு வழங்கிய கொண்டாடிய குடும்பத்தினர்!

இன்றைய தங்கம் விலை!

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies