இந்திய ராணுவத்திற்கு 659 கோடி ரூபாயில் அதிநவீன உபகரணங்கள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்கேயு லிமிடெட் மற்றும் மெட்பிட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய ஒருங்கிணைந்த நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சுமார் 659 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ராணுவத்திற்கு, இலக்குகளை இரவு நேரத்திலும் துல்லியமாகப் பார்க்க உதவும் கருவி உள்பட அதிநவீன கருவிகள் வாங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.