தித்திக்கும் தீபாவளிக்கு 'தேனூறும் ஜிலேபி' ரெடி!
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

திண்டுக்கல் நாகல் நகர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சேஷா ஐயர் மிட்டாய் கடை, ஆண்டு முழுவதும் பல இனிப்பு மற்றும் காரவகை தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவர்கள் தயாரிக்கும் ஜிலேபி-க்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், பிறந்தநாள் போன்ற இல்ல விழாக்களிலும் இவர்கள் தயாரிக்கும் ஜிலேபிக்களை மக்கள் ஆர்வமுடன் ஆர்டர் செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாகத் திண்டுக்கலுக்கு பெயர்போன பூட்டு, பிரியாணி, சிறுமலை வாழைப்பழம் ஆகியற்றின் வரிசையில் 4 தலைமுறைகளாகச் சுவை மாறாமல் தயாரித்து விற்பனை செய்யப்படும் சேஷா ஐயர் மிட்டாய் கடையின் ஜிலேபியும் இடம்பிடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உளுந்து, அரிசியை நன்கு ஊறவைத்து அரைத்து மாவாக்கி, துணியைப் பயன்படுத்தி அதனை எண்ணெயில் வட்ட வடிவில் பிழிந்தெடுக்கின்றனர். பொன்நிறத்தில் வெந்தபின் அவற்றைத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரை பாகில் ஊறவைத்து, நன்கு வடிகட்டிய சர்க்கரை பாகை அதன் மேல் ஊற்றுவதன் மூலம் சுவைமிகுந்த ஜிலேபி தயாரிக்கப்படுகிறது.

எந்தவித ரசாயனமோ, வண்ண பொடிகளோ கலக்காமல் மிகவும் சுகாதாரமான முறையில் சுவைமிகுந்த ஜிலேபிக்கள் தயாரிக்கப்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி வாங்கி உண்பதாகக் கூறுகின்றனர் இக்கடையின் பணியாளர்கள்.

தாத்தா தொடங்கிய தொழிலைக் கைவிட மனமில்லாமல் குடும்ப தொழிலை நான்காவது தலைமுறையாக முன்னெடுத்து செல்வதாகக் கூறுகிறார் சேஷா ஐயர் மிட்டாய் கடை உரிமையாளர் பிரியா லட்சுமி. தாத்தாவின் கைவண்ணம் மாறாமல் குடும்ப தொழிலை செய்வது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தங்கள் தொழில் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிகிறது என்ற எண்ணம் அதிலும் அதிக மனநிறைவை அளிக்கிறது எனப் பெருமிதம் நிறைந்த முகத்துடன் கூறுகிறார் பிரியா லட்சுமி.

Tags: 'Fire-Free Diwali''Thenurum Jalebi' is ready for Diwali
ShareTweetSendShare
Previous Post

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

Next Post

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies