தித்திக்கும் தீபாவளிக்கு 'தேனூறும் ஜிலேபி' ரெடி!
Jun 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

திண்டுக்கல் நாகல் நகர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சேஷா ஐயர் மிட்டாய் கடை, ஆண்டு முழுவதும் பல இனிப்பு மற்றும் காரவகை தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவர்கள் தயாரிக்கும் ஜிலேபி-க்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், பிறந்தநாள் போன்ற இல்ல விழாக்களிலும் இவர்கள் தயாரிக்கும் ஜிலேபிக்களை மக்கள் ஆர்வமுடன் ஆர்டர் செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாகத் திண்டுக்கலுக்கு பெயர்போன பூட்டு, பிரியாணி, சிறுமலை வாழைப்பழம் ஆகியற்றின் வரிசையில் 4 தலைமுறைகளாகச் சுவை மாறாமல் தயாரித்து விற்பனை செய்யப்படும் சேஷா ஐயர் மிட்டாய் கடையின் ஜிலேபியும் இடம்பிடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உளுந்து, அரிசியை நன்கு ஊறவைத்து அரைத்து மாவாக்கி, துணியைப் பயன்படுத்தி அதனை எண்ணெயில் வட்ட வடிவில் பிழிந்தெடுக்கின்றனர். பொன்நிறத்தில் வெந்தபின் அவற்றைத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரை பாகில் ஊறவைத்து, நன்கு வடிகட்டிய சர்க்கரை பாகை அதன் மேல் ஊற்றுவதன் மூலம் சுவைமிகுந்த ஜிலேபி தயாரிக்கப்படுகிறது.

எந்தவித ரசாயனமோ, வண்ண பொடிகளோ கலக்காமல் மிகவும் சுகாதாரமான முறையில் சுவைமிகுந்த ஜிலேபிக்கள் தயாரிக்கப்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி வாங்கி உண்பதாகக் கூறுகின்றனர் இக்கடையின் பணியாளர்கள்.

தாத்தா தொடங்கிய தொழிலைக் கைவிட மனமில்லாமல் குடும்ப தொழிலை நான்காவது தலைமுறையாக முன்னெடுத்து செல்வதாகக் கூறுகிறார் சேஷா ஐயர் மிட்டாய் கடை உரிமையாளர் பிரியா லட்சுமி. தாத்தாவின் கைவண்ணம் மாறாமல் குடும்ப தொழிலை செய்வது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தங்கள் தொழில் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிகிறது என்ற எண்ணம் அதிலும் அதிக மனநிறைவை அளிக்கிறது எனப் பெருமிதம் நிறைந்த முகத்துடன் கூறுகிறார் பிரியா லட்சுமி.

Tags: 'Fire-Free Diwali''Thenurum Jalebi' is ready for Diwali
ShareTweetSendShare
Previous Post

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

Next Post

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies