தித்திக்கும் தீபாவளிக்கு 'தேனூறும் ஜிலேபி' ரெடி!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

திண்டுக்கல் நாகல் நகர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சேஷா ஐயர் மிட்டாய் கடை, ஆண்டு முழுவதும் பல இனிப்பு மற்றும் காரவகை தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவர்கள் தயாரிக்கும் ஜிலேபி-க்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், பிறந்தநாள் போன்ற இல்ல விழாக்களிலும் இவர்கள் தயாரிக்கும் ஜிலேபிக்களை மக்கள் ஆர்வமுடன் ஆர்டர் செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாகத் திண்டுக்கலுக்கு பெயர்போன பூட்டு, பிரியாணி, சிறுமலை வாழைப்பழம் ஆகியற்றின் வரிசையில் 4 தலைமுறைகளாகச் சுவை மாறாமல் தயாரித்து விற்பனை செய்யப்படும் சேஷா ஐயர் மிட்டாய் கடையின் ஜிலேபியும் இடம்பிடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உளுந்து, அரிசியை நன்கு ஊறவைத்து அரைத்து மாவாக்கி, துணியைப் பயன்படுத்தி அதனை எண்ணெயில் வட்ட வடிவில் பிழிந்தெடுக்கின்றனர். பொன்நிறத்தில் வெந்தபின் அவற்றைத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரை பாகில் ஊறவைத்து, நன்கு வடிகட்டிய சர்க்கரை பாகை அதன் மேல் ஊற்றுவதன் மூலம் சுவைமிகுந்த ஜிலேபி தயாரிக்கப்படுகிறது.

எந்தவித ரசாயனமோ, வண்ண பொடிகளோ கலக்காமல் மிகவும் சுகாதாரமான முறையில் சுவைமிகுந்த ஜிலேபிக்கள் தயாரிக்கப்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி வாங்கி உண்பதாகக் கூறுகின்றனர் இக்கடையின் பணியாளர்கள்.

தாத்தா தொடங்கிய தொழிலைக் கைவிட மனமில்லாமல் குடும்ப தொழிலை நான்காவது தலைமுறையாக முன்னெடுத்து செல்வதாகக் கூறுகிறார் சேஷா ஐயர் மிட்டாய் கடை உரிமையாளர் பிரியா லட்சுமி. தாத்தாவின் கைவண்ணம் மாறாமல் குடும்ப தொழிலை செய்வது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தங்கள் தொழில் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிகிறது என்ற எண்ணம் அதிலும் அதிக மனநிறைவை அளிக்கிறது எனப் பெருமிதம் நிறைந்த முகத்துடன் கூறுகிறார் பிரியா லட்சுமி.

Tags: 'Fire-Free Diwali''Thenurum Jalebi' is ready for Diwali
Share
Tweet
SendShare
Previous Post

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

Next Post

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies