டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் "BRICS"!
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

Murugesan M by Murugesan M
Oct 16, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்… பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டாலர் மீது தாக்குதல் நடத்துவதாக வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் டிரம்ப்…. காரணம் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

உலகின் தெற்கு நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிக்ஸ் விளங்குகிறது… பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் சுருக்கமே பிரிக்ஸ் என்றாலும், இதில் 20 உறுப்பு நாடுகள் உள்ளன.

டாலருக்கு மாற்றான கரன்சியை உருவாக்குவதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு காட்டும் முனைப்பு அமெரிக்காவுக்கு ஆரம்பத்தில் இருந்து எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.. இதன் காரணமாகவே அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார் டிரம்ப்.

அமெரிக்க கருவூல அலுவலகத்தின் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் சில நாடுகள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருவது தெரியவந்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்புச் சரிவு, சர்வதேச அரசியல் நிலைத்தன்மை, ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை போன்றவை, அமெரிக்க கருவூல பத்திரங்கள்மீதான விருப்பத்தைக் குறைத்துள்ளன.

இது ஒரு வகையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு சாதகமாகப் பார்க்கப்படும் நிலையில், 2026ம் ஆண்டில் இந்தியா தலைமை தாங்கும் 20 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான சாடினார். பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது அமெரிக்க டாலர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.

வரி விதிப்பு எச்சரிக்கைக்குப் பின்னர் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர முயற்சித்த பல நாடுகள் விலகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் வலுவான கரன்சியாக டாலர் இருக்க வேண்டும் என்பதிலும், சர்வதேச அளவில் தொடர்ந்து முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறியிருக்கும் டிரம்ப், வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலரை பயன்படுத்துபவர்களுக்கு அமெரிக்கா சாதகமாக இருக்கும் என்றும், டாலரை தவிர்த்தால் அமெரிக்கா சாதகமாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

டாலருக்கு எதிரான நிலைப்பாட்டைப் பிரிக்ஸ் நாடுகள் மேற்கொண்டால், அந்நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்றும், இதன் மூலம் அந்த அமைப்பில் இருந்து அனைவரும் படிப்படியாக வெளியேறுவார்கள் என்றும் கூறியிருக்கிறார் டிரம்ப்.. பிரிக்ஸில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா ஆகிய 10 நாடுகள் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக உள்ளன.

10 நாடுகள் இணை உறுப்பினர்களாக இருக்கின்றன. பிரிக்ஸில் இணைய 2022-ல் முறையாக விண்ணப்பித்த அர்ஜெண்டினா, தற்போதைய அதிபரும், டிரம்பின் நண்பருமான ஜேவியர் மிலே பொறுப்பேற்ற பின்னர் அதனைக் கைவிட்டது.

அண்மையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் – அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே சந்தித்துக் கொண்ட நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு பற்றிய விவாதம் அங்கு மேலோங்கியிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாகவே பிரிக்ஸ் அமைப்பைக் கலைக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில், உலகளாவிய சுகாதாரம், காலநிலை போன்ற முக்கிய பிரச்னைகள் முன்னிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபரின் பிரிக்ஸ் பற்றிய பேச்சு அவரது விஷமத்தனத்தையும், அமெரிக்காவின் பயத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Tags: Trump: "BRICS" will make America trembleஅமெரிக்காவை நடுங்க வைக்கும் "BRICS"
ShareTweetSendShare
Previous Post

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

Next Post

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies