கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் - போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 18, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட சில ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படிக்கும் மற்றும் பணிபுரியும் பொதுமக்கள், தீபாவளி பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக தமிழக அரசு சார்பில் 2 ஆயிரத்து 675 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டன.

அக்டோபர் 17 முதல் 20-ம் தேதி வரை இந்த சேவை தொடரும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தை குறைக்க வெளியூர் செல்லும் பாதைகளுக்கு ஏற்ப வெவ்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி காந்திபுரம், சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், மக்கள் அலைச்சலுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி, பொன்னமராவதி, கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.

ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்களால் மாவட்டம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், முன்பதிவு செய்த பயணிகள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் இன்னலுக்குள்ளாகினர்.

கோவை புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான மக்கள் திரண்டதால், திருச்சி, தஞ்சாவூர், மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக கொச்சின் பைபாஸ் சாலையில் தொடங்கி சூலூர் புதிய பேருந்து நிலையம் வரை வாகனங்கள் நீண்ட தூரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் சொந்த ஊர் புறப்பட்ட பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

Tags: DeepavalDiwali fuctiondiwali 20252025 diwalidiwali puja 2025diwali song 2025
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies