கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் - போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!
Oct 18, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Web Desk by Web Desk
Oct 18, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட சில ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படிக்கும் மற்றும் பணிபுரியும் பொதுமக்கள், தீபாவளி பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக தமிழக அரசு சார்பில் 2 ஆயிரத்து 675 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டன.

அக்டோபர் 17 முதல் 20-ம் தேதி வரை இந்த சேவை தொடரும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தை குறைக்க வெளியூர் செல்லும் பாதைகளுக்கு ஏற்ப வெவ்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி காந்திபுரம், சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், மக்கள் அலைச்சலுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி, பொன்னமராவதி, கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.

ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்களால் மாவட்டம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், முன்பதிவு செய்த பயணிகள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் இன்னலுக்குள்ளாகினர்.

கோவை புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான மக்கள் திரண்டதால், திருச்சி, தஞ்சாவூர், மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக கொச்சின் பைபாஸ் சாலையில் தொடங்கி சூலூர் புதிய பேருந்து நிலையம் வரை வாகனங்கள் நீண்ட தூரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் சொந்த ஊர் புறப்பட்ட பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

Tags: DeepavalDiwali fuctiondiwali 20252025 diwalidiwali puja 2025diwali song 2025
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் – வினோஜ் பி.செல்வம்

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தேவை – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும் – அன்புமணி

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நற்பணி மன்றம் விவகாரம் – அண்ணாமலை வேண்டுகோள்!

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies