கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் - போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!
Jul 29, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 18, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட சில ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படிக்கும் மற்றும் பணிபுரியும் பொதுமக்கள், தீபாவளி பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக தமிழக அரசு சார்பில் 2 ஆயிரத்து 675 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டன.

அக்டோபர் 17 முதல் 20-ம் தேதி வரை இந்த சேவை தொடரும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தை குறைக்க வெளியூர் செல்லும் பாதைகளுக்கு ஏற்ப வெவ்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி காந்திபுரம், சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், மக்கள் அலைச்சலுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி, பொன்னமராவதி, கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.

ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்களால் மாவட்டம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், முன்பதிவு செய்த பயணிகள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் இன்னலுக்குள்ளாகினர்.

கோவை புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான மக்கள் திரண்டதால், திருச்சி, தஞ்சாவூர், மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக கொச்சின் பைபாஸ் சாலையில் தொடங்கி சூலூர் புதிய பேருந்து நிலையம் வரை வாகனங்கள் நீண்ட தூரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் சொந்த ஊர் புறப்பட்ட பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

Tags: DeepavalDiwali fuctiondiwali 20252025 diwalidiwali puja 2025diwali song 2025
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies