ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்த கர்நாடக அரசு - நீதிமன்றம் அனுமதி : சிறப்பு தொகுப்பு!
Oct 20, 2025, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்த கர்நாடக அரசு – நீதிமன்றம் அனுமதி : சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Oct 20, 2025, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசால் தடை விதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக சற்று விரிவாக காணலாம் இந்த செய்தி தொகுப்பில்…

கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டத்தில் உள்ள சித்தாபூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஊர்வலம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், அதே நாள் அதே இடத்தில் பீம் ஆர்மி மற்றும் பாரதிய தலித் பாந்தர் போன்ற சமூக அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக குறிப்பிட்ட மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கலபுரகி ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி எம்.ஜி.எஸ். கமல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு அனைவரின் உணர்வுகளையும் மதித்து சமநிலையுடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், அனைத்து அமைப்புகளும் தங்கள் உரிமைகளை சட்டப்படி அனுமதி பெற்று பயன்படுத்த முடியும் என குறிப்பிட்ட நீதிபதிகள், நவம்பர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டனர். அதற்காக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புதிய மனுவை கலபுரகி துணை ஆணையரிடம் தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், மாவட்ட அதிகாரிகள் அது தொடர்பான அறிக்கையை வரும் அக்டோபர் 24-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அண்மையில் சித்தாபூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவக் ஒருவர் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல, சித்தாபூர் பகுதி முழுவதும் வைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் கொடிகள் மற்றும் பதாகைகளை, மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் போலீசார் அகற்றியதும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலை கூடுதல் பரபரப்பாகியது.

மற்றொருபுறம் கர்நாடக அரசு எந்த தனியார் அமைப்பும் அரசின் இடங்கள் அல்லது பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்த, முன்னரே அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சார்பில் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, இந்த விதி பாஜக ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது எனவும், தங்கள் அரசு அந்த விதியை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்ததை வரவேற்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, அரசியலமைப்பை காக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் அரசு வடகொரிய அரசு போல் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய விஜயேந்திர எடியுரப்பா, தற்போதைய நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஊர்வலத்தை தடுக்க முயன்ற காங்கிரஸ் அரசு நாணக்கேடு அடைந்துள்ளதாக விமர்சித்தார்.

கர்நாடகாவில் இந்த வழக்கு ஒரு முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், பொது இடங்களில் கூட்டம் நடத்தும் உரிமை மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், நீதிமன்றம் ஊர்வலத்துக்கான உரிமையை மறுக்காமல், நிர்வாக ஒப்புதலுடன் நடத்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், சித்தாபூரில் நவம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: congress governmentKalaburagiRSS processionourt permissionSithapur area
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – காங்.எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

Next Post

தீபாவளி பண்டிகை – குடியரசு தலைவர் திரௌதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Related News

உலகின் மிகப் பெரிய இராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பில் சீனா – சிறப்பு தொகுப்பு !

திக்…திக்..பக்..பக்.. : சிதிலமடைந்த குடியிருப்புகள் – திகிலுடன் வாழும் மக்கள்!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம் – 7000 கோடிக்கு பட்டாசு விற்பனை!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொடிவேரி அணை மூடல்!

தீபாவளி சிறந்த சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐஎன்எஸ் விக்ராந் போர் கப்பலில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி – குடும்பத்தினருடன் கொண்டாடுவதாக பெருமிதம்!

தீபாவளி பண்டிகை – தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

சர்ச்சையை கிளப்பிய யூசுப் பதான் பதிவு : ஆதீனா மசூதியா? – ஆதிநாத் கோயிலா?

தீபாவளி பண்டிகை – குடியரசு தலைவர் திரௌதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்த கர்நாடக அரசு – நீதிமன்றம் அனுமதி : சிறப்பு தொகுப்பு!

சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – காங்.எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள் : பிரதமர் மோடி

ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை மிளிரச் செய்யட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு”!

இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies