பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை - நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?
Oct 21, 2025, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

Web Desk by Web Desk
Oct 21, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸின் புகழ்பெற்ற அருங்காட்சியகத்திலிருந்து 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமன்னர் நெப்போலியனின் முத்திரைகள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு…

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உலகின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றான லூவ்ர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பிரான்சின் வரலாற்று சொத்துக்களாகக் கருதப்படும் மன்னர் நெப்போலியனின் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்திரைகள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட விலை மதிப்பற்ற கிரீடம் போன்றவை லூவ்ர் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அவற்றை மர்ம நபர்கள் சினிமா பாணியில் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கடந்த 19-ம் தேதி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின் கொள்ளை சம்பவம் அரங்கேறியது வெளிச்சத்திற்கு வந்தது.

சென்னே நதிக்கரையோர பால்கனி வழியாக MECHANICAL LIFT-ஐ பயன்படுத்தி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த 4 மர்ம நபர்கள், கண்ணாடி ஜன்னல்களை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் பாதுகாவலர்களை அச்சுறுத்திய அவர்கள், அங்குக் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அரச முத்திரைகள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, இருசக்கர வாகனங்கள்மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அருங்காட்சியகத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய நபர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருந்ததாக அந்நாட்டின் கலாசார அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் முழுமையாகக் கண்காணிக்கப்படாத பகுதிகளைக் கொள்ளையர்கள் முன்னரே அறிந்திருந்ததால், அவர்களால் எளிதாகக் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்புவதற்கு முன் அவர்களைப் பிடிக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், பாதுகாவலர்களைப் பணயமாக வைத்து அவர்கள் தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமன்னர் 3-ம் நெப்போலியன், அரசி யூஜினி, அரசி மேரி லூயிஸ், அரசி மேரி அமெலி மற்றும் அரசி ஹார்டென்ஸ் ஆகியோருக்கு சொந்தமான தங்க மாலை, முத்து மாலை, வைரக்கல் கிரீடம், ரத்தின ஆபரணங்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், கொள்ளையர்களின் கைதவறி கீழே விழுந்த இரு ஆபரணங்கள் மீட்கப்பட்டதாகவும் அருங்காட்சியக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக 60 அதிகாரிகள் அடங்கிய பல்வேறு குழுக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து கொள்ளையர்களை அடையாளம் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளையாகக் கருதப்படும் இந்தக் கொள்ளை சம்பவம், நாட்டு மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்தக் கொள்ளை சம்பவத்தைத் தங்கள் வரலாற்று சான்றுகளுக்கு எதிரான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள அதிபர் மேக்ரான், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்ளை சம்பவம், அரசியல் ரீதியான விமர்சனங்களையும், சமூக ஊடகங்களில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. குறிப்பாக இதே அருங்காட்சியகத்தில் கடந்த 1911-ம் ஆண்டு வைக்கப்பட்டிருந்த மோனாலிசா ஓவியம் திருடப்பட்டது பலரால் நினைவுகூரப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொள்ளை சம்பவம் தொடர்பான முழு விசாரணையும் முடிவடைந்த பிறகே அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் முன்பதிவு செய்த மக்களுக்கு அவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags: The daring robbery that angered the French president - will Napoleon's century-old treasure be recovered?
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

Next Post

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

Related News

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள சனேனே டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா : விறுவிறுப்பாக நடைபெற்ற விநோத பூசணிக்காய் படகு பந்தயம்!

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

அமெரிக்கா : சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

கர்நாடகா : மலை உச்சியில் உள்ள தேவிரம்மா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

அமாவாசை தினத்தில் கேதார கெளரி நோன்பு கடைபிடிக்கும் பெண்கள்!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies