இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !
Jun 13, 2026, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

Murugesan M by Murugesan M
Oct 21, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – காசா எல்லையைப் பிரிக்கப் போடப்பட்டுள்ள மஞ்சள் கோடு தற்போது மக்களின் உயிரைப் பறிக்கும் பேராபத்தாக மாறி வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

அமெரிக்கா நடத்திய இடைநிலை உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இஸ்ரேல் படையினர் காசாவில் தங்கள் படைகளை விலக்கிக்கொள்ளும் வரம்பாக “மஞ்சள் கோடு” என்ற பெயரில் கற்பனை கோடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தக் கோட்டை கடப்பவர்கள் மீதும், அதன் அருகே நெருங்குபவர்கள் மீதும் இஸ்ரேல் படைகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 20 அம்ச இடைநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்பனை எல்லையே இந்த மஞ்சள் கோட்டை வரையறுத்துள்ளது. அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்ததடையடுத்து கடந்த 10-ம் தேதி முதல் இஸ்ரேல் படைகள் காசாவை விட்டு வெளியேறத் தொடங்கியிருந்தாலும், காசாவின் தென்மேற்கு ரஃபா பகுதிகள், வடக்கு பகுதிகள் மற்றும் காசா நகரின் முக்கிய பகுதிகள் உட்பட 50 சதவீத பகுதிகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் இந்த மஞ்சள் கோட்டை நெருங்குபவர்கள் மீது முன்னெச்சரிக்கைகளின்றி இஸ்ரேல் படைகள் சரமாரி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கற்பனையான மஞ்சள் கோட்டை கான்கிரீட் கற்களை வைத்து அடையாள படுத்தி வருவதாக இஸ்ரேல் படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், நிகழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள், இந்தக் கோடு மக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற பகுதி என்பதை உறுதிபடுத்துவதாகக் காசா சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே காசா அரசின் செய்தித்துறை அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த 10-ம் தேதி முதல் இதுவரை 80-க்கும் மேற்பட்ட இடைநிலை உடன்படிக்கை மீறல்களில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இஸ்ரேல் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதல்களால் நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 230 பேர் வரை காயமடைந்து உள்ளதாகவும் இன்னும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், இஸ்ரேல் படைகளின் தாக்குதல்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காசா அரசுக் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் படைகளின் அத்துமீறிய தாக்குதல்களைக் கொடுங்குற்றங்கள் எனக் குறிப்பிட்டு ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சாமானிய மக்களை இலக்காக வைத்து நடத்தப்படும் இஸ்ரேலின் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் சர்வதேச நடுநிலை வகிக்கும் பிற நாடுகள் தடுத்து நிறுத்தி, இடைநிலை உடன்படிக்கையை மதிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் போரால் இதுவரை காசாவில், 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். காசாவின் 90 சதவீத உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மாசுபாடுகளால் காசா மக்களுக்கு மஞ்சள் கோடு எங்குள்ளது என அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால், ‘மஞ்சள் கோடு’ என்ற கற்பனை கோடு பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து மீறப்பட்டு வரும் இடைநிலை உடன்படிக்கை குறித்து நடுநிலைவாதிகள் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: gazaThe Yellow Line separating the Israel-Gaza border: A tragedy that has become a danger that takes people's lives
ShareTweetSendShare
Previous Post

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Next Post

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

Related News

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies