பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி - ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!
Jan 14, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

Murugesan M by Murugesan M
Oct 23, 2025, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணியை எதிர்த்துக் களம் கண்டுள்ள மகா கூட்டணியில் குழப்பம் தீராத நிலையில், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.. கூட்டணி கட்சியினரே கூட்டணி வேட்பாளரை எதிர்த்து வேட்புமனுக்களை அளித்துள்ள நிலையில், மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பீகார் மாநிலம், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடைசி வரை தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் தங்களுக்குள்ளேயே போட்டிப்போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறது ஆர்.ஜே.டி., காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி. பீகார் தேர்தலில் ஆளும் ஜேடியு, பாஜக கூட்டணிக்கு எதிராக, மகா கூட்டணி களமிறங்கியிருக்கிறது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சேன் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளன… ஆளுங்கட்சிக்கு நிகராகப் பலமான கூட்டணியை அமைத்துள்ளதாக மார்தட்டி கொண்டாலும், மகா கூட்டணியில் குழப்பம் தீர்ந்தபாடில்லை.

அவர்களது கூட்டணி கட்சிகளே வில்லங்கமாக மாறியிருப்பதால், மகா கூட்டணி தட்டுதடுமாறி வருகிறது… முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்திருக்கும் நிலையில், தொகுதிப்பங்கீட்டில் இழுபறி இன்னமும் நீடிக்கிறது. தொகுதிகளை ஒதுக்காமல் இழுத்தடித்ததன் காரணமாக, கூட்டணியில் இருந்தே விலகுவதாக அறிவித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.

தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் அதிரடியாக அறிவித்திருப்பது மகா கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மகா கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தேஜஸ்வி யாதவ் தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை உறுதியாக வெளிப்படுத்தாமல் மவுனம் காத்து வருகிறது.

தொகுதி பங்கீடு பற்றிய குழப்பத்திற்கு மத்தியில், ஆர்ஜேடி 143 வேட்பாளர்கள் கொண்ட அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டது.. காங்கிரஸ் 61 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. 12 தொகுதிகளுக்காக ஆர்ஜேடி, காங்கிரஸ் அடித்துக் கொள்ளும் நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெறும் நாளில் இறுதி முடிவை எடுக்கவிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…. இடப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற தலைவர்கள், அந்தந்த கட்சித் தலைமைகளின் ஈகோவையும் குற்றம் சாட்டினர்.

இதற்கு பச்வாரா தொகுதி ஒரு சிறந்த உதாரணமாக கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவரும் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராம்தியோ ராயின் மகனுமான சிவபிரகாஷ் கரிப் தாஸ் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் பச்வாராவை கேட்டது… ஆனால், சிபிஐ, 2020-ல் வெறும் 484 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தனது வேட்பாளர் அவதேஷ் குமார் ராய்க்கு அந்த இடத்தைக் கோரியது.

இரு தரப்பும் விட்டுக்கொடுக்காத நிலையில், பச்வாரா தொகுதியில் சிபிஐ மற்றும் காங்கிரஸ் கூட்டணி தங்களது வேட்பாளர்களை நேருக்கு நேராக நிறுத்தியிருக்கிறது… கூட்டணியில் நீடிக்கும் குழப்பம், அக்கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.. இதுபோன்ற செயல்பாடுகள், கூட்டணி பலவீனமாக்கியதோடு, ஆளும் கட்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags: bjpndabihar election 2025The grand alliance will be weak in the Bihar elections - RJD. Congressa rift in the relationship
ShareTweetSendShare
Previous Post

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

Next Post

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies