அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராகப் பதவியேற்றார்.
பதவியேற்ற நாள் முதலே குடியுரிமை கொள்கைகள், வரி விதிப்பு என டிரம்ப் அதிருப்தியை சேர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த கமலா ஹாரிஸ், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார் எனவும், அது தானாகக் கூட இருக்கலாம் எனவும் கூறினார்.
மேலும், ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற தனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
















