கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் கொத்தன்குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுக் கொத்தன்குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்தக் கொத்தன்குளம், சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கிவருகிறது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதிலும், விவசாயத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றி வந்த கொத்தன்குளம் கடந்த சில ஆண்டுகளாகவே குப்பைகளைக் கொட்டும் குளமாக மாறி வருகிறது.

கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் இந்தக் கொத்தன்குளம் மட்டுமல்லாது அதன் பாசனப்பகுதியிலும் கொட்டப்பட்டு வருகிறது.

அதில் இறைச்சிக் கழிவுகளும், பயன்படுத்திய மருத்துவக் கழிவுகளும் கலந்திருப்பதால் குளத்தின் நீர் நேரடியாக நஞ்சாகிக் கொண்டிருப்பதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பருவமழை தொடங்கிய நிலையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் மழையால், குப்பைக் குவியல்களில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் பன்மடங்கு அதிகரித்து பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை உள்ளாக்கியுள்ளது. நீண்ட நெடும் நாட்களாகத் தேங்கியிருக்கும் குப்பைகளில் இருந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கொட்டப்படும் கழிவுகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் மூச்சுத்திணறலுக்கு உள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமன்றி விவசாயத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டும் குப்பைகள் கொட்டும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் கொத்தன் குளத்தை முறையாகச் சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tamil NaduFarmers in tears: Irrigation pond poisoned by medical wasteகண்ணீர் வடிக்கும் விவசாயிகள்நஞ்சான பாசன குளம்
ShareTweetSendShare
Previous Post

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

Next Post

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies