படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!
Mar 15, 2026, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு மூன்று டிகிரிகள் படிப்பதையே பலர் சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் ஒருவர் சத்தமே இல்லாமல் 150 டிகிரிகளை முடித்துள்ளார். யார் அவர்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தாண்டு தொடக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ட்ராகன் என்ற திரைப்படம் வெளியானது. ஒன்றை டிகிரியின் அவசியம் குறித்தும், அதை முடிக்கக் கதாநாயகன் என்ன பாடுபடுகிறான் என்பதையும் அந்த படம் காட்டியிருந்தது.

இப்படியொரு டிகிரியை முடிப்பதே பலருக்கு குதிரை கொம்பாக இருக்கும் சூழலில், சென்னையை சேர்ந்த ஒருவர் 150க்கும் மேற்பட்ட டிகிரிகளை முடித்து ஒட்டுமொத்த மாணவ சமூதாயத்தையும் அலறவிட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் பார்த்திபன். ஆர்.கே.எம் விவேகானந்தா கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும் வணிகத் துறைத் தலைவராகவும் உள்ள இவர் 1981ம் ஆண்டு தனது முதல் டிகிரியை முடித்தார். இருந்தபோதும் அவரது கற்றல் ஆர்வம் தீரவில்லை. ஆகவே, மேலும் பல பட்டப்படிப்புகளிலும், டிப்ளமோ கோர்ஸ்களிலும் சேர்ந்தார்.

பொருளாதாரம், பொலிட்டிகல் சயன்ஸ், சட்டம், பொது நிர்வாகம், இதழியல், கிரிமினாலஜி, சைக்காலஜி என என்னென்ன படிப்புகள் உள்ளதோ அனைத்தையும் அவர் படிக்கத் தொடங்கினார். பேராசிரியர் பார்த்திபன் இன்றைய தேதிக்கு 13 எம்ஏ பட்டங்களும், 12 பி.ஃபில் பட்டங்களும், 14 எம்பிஏ பட்டங்களும், 8 எ.காம் பட்டங்களும் முடித்துள்ளார். அத்துடன், 11 சான்றிதழ் படிப்புகளையும், 9 PG diploma படிப்புகளையும், 20 professional course-களையும் நிறைவு செய்துள்ளார்.

இதன் காரணமாகப் பலரும் அவரை நடமாடும் என்சைக்ளோபீடியா எனவும், பட்டங்களின் களஞ்சியம் எனவும் அழைக்கின்றனர். அவரிடம் பயிலும் மாணவர்கள் காலை எழுந்து படிக்கிறார்களோ இல்லையோ, அவர் சரியாகக் காலை 5 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து படிக்கத் தொடங்கிவிடுவார். பின்னர் கல்லூரி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும் அவர், மீண்டும் 11.30 மணி வரை படிப்பார். பல ஆண்டுகளாக இதனை ஒரு வழக்கமாக அவர் கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அவர் ஓய்வெடுப்பதில்லை. அன்றைக்கும்கூட படிப்பு, ஆராய்ச்சி, தேர்வு என எதிலாவது மூழ்கியிருப்பார். தற்போது மேலாண்மையில் முனைவர் பட்டமும், நிறுவனச் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் படித்து வருவதாகப் பேராசிரியர் பார்த்திபன் தெரிவிக்கிறார். சாதாரணமாக ஒரு டிகிரி படிப்பதற்கே கணிசமான செலவு ஏற்படும்.

இந்த நிலையில், 150க்கும் மேற்பட்ட டிகிரிகளை முடிக்க எத்தனை செலவாகியிருக்கும் என்பதை விளக்க தேவையில்லை. தனது சம்பளத்தில் 90 சதவீத தொகை கட்டணங்களுக்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும், தேர்வு செலவுகளுக்கும் செல்வதாக அவர் கூறுகிறார். பேராசிரியர் பார்த்திபனின் இந்தக் கற்றல் பயணத்திற்கு அவரது மனைவி செல்வக்குமாரி மிகுந்த உறுதுணையாக இருந்து வருகிறார்.

அவரும் 9 டிகிரிகள் முடித்துள்ளார் என்பதுதான் இதில் கூடுதல் சிறப்பே. 16 வயதில் தொடங்கிய பார்த்திபனின் பட்டப் படிப்புப் பயணம், 60 வயதை கடந்தும் தொடர்ந்து வருகிறது. தான் படிப்பை மிகவும் நேசிப்பதாகவும், படிப்பது ஒன்றும் தனக்கு கடினமாக இல்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

மேலும், தேர்வுகளுக்குத் தயாராவதும், புதிய பட்டங்கள் பெறுவதும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறுகிறார். “சரி சார். வாழ்க்கையில் உங்கள் இலக்குதான் என்ன?” என்ற கேள்விக்கு, “விரைவில் 200 டிகிரிகளை பெறுவதுதான் தனது வாழ்நாள் லட்சியம்” என அவர் கூறியுள்ளது பல மாணவர்களை மூச்சடைக்க செய்துள்ளது.

Tags: 150+ டிகிரிChennaichennai news todayProfessor who excels in studies: An amazing achievement by completing 150+ degrees
ShareTweetSendShare
Previous Post

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

Next Post

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies