சீன "சிப்"-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் நெக்ஸ்ப்ரீயா நிறுவனத்தை நெதர்லாந்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் விளைவு, ஆட்டோமொபைல் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களின் உயிர் நாடியான “சிப்”இன் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், பிரபல கார் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயமும் எழுந்துள்ளது.

21-ஆம் நூற்றாண்டின் உண்மையான சக்தி, வலிமை சிறிய CHIP-இல் குவிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போன்று, அளவில் சிறியதாக இருந்தாலும் உலகின் முன்னேற்றத்தை வேகமாக இயக்கும் வலிமை CHIP-இல் பொதிந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள், கணினிகள், வாகனங்கள் முதல் போர் ஆயுதங்கள் வரை அனைத்திற்கும் உயிர் நாடியாக இருப்பது இந்த CHIP-கள் தான். செமிகண்டக்டர் துறையில் அமெரிக்கா ஒருபுறம் கோலோச்சி வந்தாலும், இதே துறையில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியிலும் வேகமாக ஈடுபட்டு வருவது சர்வதேச சமூகம் அறிந்த உண்மை.

சூப்பர் கம்யூட்டர்கள், ஏ.ஐ., தொழில்நுட்பம், ராணுவ தளவாட உற்பத்தியில் மேம்படுத்த CHIP-கள் இதய துடிப்பாகவே மாறியுள்ளன. சீனாவின் லிங்டெக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் CHIP தயாரிப்பாளரான நெக்ஸ்பீரியா, நெதர்லாந்தில் பிரமாண்டமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கார்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு பொருட்களுக்கான சிப்களை தயாரித்து சந்தைப்படுத்திய வருகிறது.

ஆனால் 21ம் நூற்றாண்டின் வலிமை சிப் தயாரிப்புதான் என கருதப்படும் நிலையில், தொழில்நுட்ப அறிவுசார் திருட்டு என்ற குற்றச்சாட்டு, நெக்ஸ்பீரியாவுக்கு செக் வைத்துள்ளது. அதன் பேரில் நெக்ஸ்பீரியா நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது நெதர்லாந்து.

இதன் மூலம் தங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை, தடுக்கவோ, நிறுத்தவோ முடியும் என்று நம்புகிறது. இது ஒருபுறமிருக்க CHIP-கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் சீனாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள், ஐரோப்பாவின் வாகன விநியோக சங்கியிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது சீனாவுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பப் போட்டியில பதற்றத்தை அதிகரித்துள்ளன.. ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன், CHIP பற்றாக்குறையால், உற்பத்தியை நிறுத்திவிடக்கூடும் அபாயம் எழுந்திருக்கிறது.. இந்த முட்டுக்கட்டைக்கு மத்தியில் உற்பத்தியைப் பாதுகாக்க விநியோகஸ்தர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக BMW, MERCEDES-BENZ நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஜெனரல் மோட்டார்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா கூற்றுப்படி, சீனாவின் CHIP மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கார் உற்பத்தியைப் பாதிக்கும் சாத்தியம் உள்ளது தெரியவந்துள்ளது. நெக்ஸ்பீரியாவின் CHIP-கள், கார் உற்பத்திக்கு இன்றியமையாதவையாகவே உள்ளன.

இவை பெரும்பாலும் சீன சந்தையையே நம்பியுள்ளன. அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு,. சீனாவின் அரிய மண் ஏற்றுமதி வரம்பு போன்ற உலகளாவிய வர்த்தக பதற்றங்களுடன், CHIP-கள் மீதான புதிய கட்டுப்பாடு, ஐரோப்பியாவின் கார் தயாரிப்பாளர்களையும், விநியோக சங்கிலியையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அறிவுசார் சொத்துரிமை கவலை காரணமாக நெதர்லாந்து அரசு நெக்ஸ்பீரியாவை கையகப்படுத்தியது, ஐரோப்பிய வாகன உற்பத்திக்குத் தேவைப்படும் அரியவகை மண் உள்ளிட்ட கனிமவளங்கள் ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சீனாவை தூண்டியது. உலகளாவில் ஆட்டோமொபைல்துறைக்கு தேவைப்படும் CHIP-களை சீனாவுக்கு சொந்தமான நெக்ஸ்பீரியாதான் விநியோகித்து வருகிறது.

நெக்ஸ்பீரியாவின் CHIP-கள் ஆட்டோமொபைல் துறையில் மிகவும் மதிப்புமிக்க விநியோக சங்கலியாகவும் உள்ளது.. AIRBAG, ENTERTAINMENT SYSTEM, AUTOMATIC FEATURES, ENGINE, ElECTRIC CAR, BATTARY என அனைத்திலும் சிப்-களின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதன் விநியோக பாதிப்பு, கார் உற்பத்தியையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒருவேளை சிப்-விநியோக சங்கிலி உடைந்தால், சீனா சிப்-களுக்கு மாற்றான சந்தையை தேட வேண்டிய சூழல் உருவாக்கும். பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது ஆலைகளைத் தற்காலிகளை மூடவோ, தயாரிப்பை நிறுத்தவோ வேண்டியதிருக்கும் என்பதுதான் தற்போதைய நிலை…. எனவே இந்தியா சொந்தமாகச் சிப் தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chinaSudden restrictions on Chinese "chips": Famous car companies at risk of closureசீன "சிப்"-களுக்கு திடீர் கட்டுப்பாடு
ShareTweetSendShare
Previous Post

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Next Post

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies