ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு - பெற்றோர்கள் அதிர்ச்சி!
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் 5 சிறுவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டிருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோரை மீளாத் துயரத்தில் தள்ளியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் உள்ள சாய்பாஷா சதார் மருத்துவமனையில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தலசீமியா எனப்படும் மரபுவழி மரபணு மாற்றத்தால், ரத்தத்தில், ஹீமோகுளோபின் பற்றாக்குறை உடைய 7 வயது சிறுவனுக்கு ரத்தம் மாற்றப்பட்டிருக்கிறது.

அடுத்த சில நாட்களில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த 18ம் தேதி அந்தச் சிறுவனுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது பெற்றோரை அதிர்ச்சியில் உறைய செய்தது. உடனடியாக மருத்துவமனையின் அலட்சியம் குறித்து காவல்துறை ஆணையரகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் பின்னரே இந்த விவகாரம் பூதாகரமானது… மாநில அரசு 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டது. அதில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.. தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 4 சிறுவர்களுக்கு ரத்தம் மாற்றப்பட்டிருப்பதும், அவர்களுக்கும் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… முதற்கட்ட விசாரணையில், சாய்பாஷா சதார் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ரத்த மாதிரி பரிசோதனை பதிவேடுகளைப் பராமரித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் என எதையுமே முறையாகச் செய்யாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

ஏழு வயது சிறுவனுக்கு 25 யூனிட் இரத்தம் மாற்றப்பட்டதாகவும், ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையின் அறிக்கையில்தான், எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எச்ஐவி தொற்று பரவ இன்னும் பிற காரணங்கள் உள்ளதாகக் கூறியுள்ள மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான சுஷாந்தோ குமார் மாஜி, பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலமாகவும் கூட எச்ஐவி தொற்று பரவும் என்று கூறியிருக்கிறார்.

எனினும் ரத்தம் மாற்றப்பட்டதன் மூலம்தான் எச்ஐவி பரவியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, மாநில சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணரின் அறிக்கையைக் கேட்டிருக்கிறது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்.

ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 512 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாகவும், 56 தலசீமா நோயாளிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டதற்கு நீதி வேண்டும் எனப் பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மருத்துவ அலட்சியத்தை தங்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சிறுவர்களுக்கு ரத்தம் மாற்றப்பட்ட விவகாரத்தில், மருத்துவர், மருத்துவ பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநில அரசு முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறது.

Tags: Medical negligence in Jharkhand: 5 boys infected with HIV - Parents shockedஜார்கண்டில் மருத்துவ அலட்சியம்5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு
ShareTweetSendShare
Previous Post

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

Next Post

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies