பெஷாவரை நெருங்கும் TTP - தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!
Jul 22, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு.. பல பழங்குடி கிராமப் பகுதிகளை கைப்பற்றியுள்ள அந்த அமைப்பினர், பெஷாவரை நோக்கி நகர்ந்து வருவது, இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மீண்டும் பற்ற வைத்துள்ளது.

பாகிஸ்தானின் பரந்து விரிந்த கைபர் பக்துங்க்வா மகாணம், தெஹ்ரீக்-இ-தாலிபான் மற்றும் அதன் கூட்டணி கிளர்ச்சிக்குழுவின் கைகளுக்குச் சென்றிருப்பதால், பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டில் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்கள்படி, கிளர்ச்சியாளர்களின் வலையமைப்பு, துராந்த் கோட்டில் உள்ள பழங்குடிகளின் பெரும் பகுதியைக் கைப்பற்றியதோடு, பாகிஸ்தான் ராணுவம் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் மாற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், கைபர், குர்ராம், வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் மற்றும் பாஜாவூர் போன்றவை பதற்றமான மாவட்டங்களாக உள்ளன. அங்குத் தாலிபான்களுடன் இணைந்த குழுக்கள், தங்களது கட்டுப்பாட்டை அதிகாரத்தைப் பலப்படுத்தியிருப்பது பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. பெஷாவர் – கைபர் சாலை, ஹங்கு-குர்ராம் வழித்தடம், வசிரிஸ்தான் நோக்கிச் செல்லும் பன்னு-தேரா இஸ்மாயின் கான் பகுதி போன்ற முக்கிய பாதைகளைத் தங்களது.

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு, அங்கு வெளிப்படையாகவே சோதனைச் சாவடிகளை அமைத்திருப்பதாக வரும் தகவல்கள் உண்மையிலேயே பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது… ஆயுதங்களுடன் ரோந்தில் இருக்கும் போராளிகள், வாகனங்களை நிறுத்துவது, அடையாள அட்டைகளை ஆய்வு செய்வது, ஜிஹாத் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக நிதியை வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் பாகிஸ்தானை தடுமாற செய்துள்ளது.

கைபர் பக்துங்க்வா பகுதியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், தெஹ்ரீக்-இ-தாலிபான் ஊடகப்பிரிவு, போராளிகள் நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்வதையும், பொதுமக்களைத் தொடர்பு கொள்வதையும் காட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.. இது பாகிஸ்தானுக்கு சொந்தமான எல்லை மாகாணங்கள் பேராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கிராமப்புற பழங்குடி மண்டலங்களிலிருந்து பெஷாவர் நகர்ப்புற எல்லையை நோக்கித் தங்களது செல்வாக்கை அதிகரிப்பதே TTP-யின் அண்மைக்கால உத்தியாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக எல்லைப்படை, உள்ளூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, படாபர், மட்டானி, பாரா கோரியார்டகளை, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகப் போராளிக்குழுக்கள் கூறுகின்றன. அங்குப் போராளிக்குழுக்கள் தங்களது படைகளை நகர்த்துவதோடு, பாதுகாப்புக்கான பணத்தை சேமிப்பதாகவும், மாகாண தலைநகரிலிருந்து தாக்கும் தூரத்திற்குள் ஆயுதங்களைச் சேமித்து வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பாகிஸ்தான் மவுனம் காத்து வருகிறது. இது தீர்க்கமான எதிர் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குப் பதிலாகக் கட்டுப்பாட்டு அணுகுமுறையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.

பாகிஸ்தானின் தற்போது இக்கட்டான நிலைக்கும், 2021ம் ஆண்டு முன்னர், தாலிபான்கள் படிப்படியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கும் இடையே பல ஒற்றுமைகளை உள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சோதனை சாவடிகள், பிரசார துண்டுபிரசுரங்கள் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கை என TTP-யின் எழுச்சியானது, போராளிக்குழுக்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையிலான கோட்டை மங்கலாக்கியுள்ளது. பாகிஸ்தான் விரைவில் கட்டுப்பாட்டை மீட்காவிட்டால், விரைவில் சரிவைச் சந்திக்கும் என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Tags: pakistanPakistan under severe pressure from TTP approaching Peshawar - Talibanதாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்தாலிபான்
ShareTweetSendShare
Previous Post

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

Next Post

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies