பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! - வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 08:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் தாயகம் திரும்புமாறு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியிருக்கிறார். பாரத மாதா உங்களை தேடுகிறாள், வரவேற்கிறாள் என்றும் கூறியிருக்கிறார். அதற்கான காரணம் என்ன. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் H1B விசா கட்டணத்தை அண்மையில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி, மறைமுகமாக இந்தியர்கள் வருகைக்குத் தடைபோட்டிருந்தார் ட்ரம்ப். அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேருவதை முடக்கும் அப்பட்டமான முயற்சி இது என்பதை அனைவரும் அறிவர்.

டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் மன்ஹாட்டன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் ஆராய்ச்சியாளர் டேனியர் டி மார்டினோ, தனது ஆய்வு கட்டுரையில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரால், அமெரிக்காவுக்கு அதிக நன்மை கிடைத்திருப்பதாகவும், இது சில முட்டாள்களுக்குப் புரிவதில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த பதிவை தனது சமூக வலைதள பக்​கத்​தில் பகிர்ந்துள்ள சோஹோ நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு, இந்திய வம்சாவளியினர் தாங்கள் வசிக்கும் நாடுகளின் வளர்ச்சிக்காக அதிக நிதி பங்களிப்பை வழங்கியிருப்பதை, மார்டினோவின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்துவதாகக் கூறியுள்ளார்.

இப்படி உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழும் இந்தியர்களை ஒரு நாடு ஆதரிக்கவில்லை, வரவேற்கவில்லை என்றால், அந்த நாட்டில் நீங்கள் ஏன் வாழ வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாரத மாதா உங்களை அழைக்கிறாள், உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறாள் என்றும் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டு இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றும், நாம் ஒன்றிணைந்து, வளமான, வலிமையான, இந்தியாவை கட்டியெழுப்புவோம் என்றும் அழைப்பும் விடுத்துள்ளார்.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்துவதாகவும், திறமையாளர்களின் இடப்பெயர்வு அதிகரிப்பது வீழ்ச்சியல்ல, மாற்றத்தைக் குறிப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.

சிலிகான் பள்ளத்தாக்கில் மட்டும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவிகிதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் தொழில்நுட்ப திறன்களை உள்நாட்டில் கட்டியெழுப்புவதற்கு ஷோஹோ நிறுவனர் தொடர்ந்து வாதிட்டு வருகிறார். அண்மையில், தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய அவர், தனது நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானியாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ஸ்ரீதர் வேம்புBharat Mata is looking for you! She welcomes you! - Sridhar Vembu calls on overseas Indians to return homeபாரத மாதா
Share
Tweet
SendShare
Previous Post

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

Next Post

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies