சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!
Jan 14, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை செல்லூர் பகுதியில் கழிவுநீர் தேங்கி வருவதாலும், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 29ஆவது வார்டில் அமெரிக்கன் மிஷன் தெரு, பாலம் ஸ்டேஷன் ரோடு, சிவன் தெரு, அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது.

இதனால் துர்நாற்றமும், நோய் பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் சூழலில், குடிநீருடனும் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் குடிக்க கூடத் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் 6 மாதங்களாகப் புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தெருக்களில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளதால் சாலைகளில் நடமாட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் செல்வதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மேலும், குழந்தைகளும், முதியவர்களும் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் சூழலும் நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செல்லூர் கபடி சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து பேட்டியளித்த பொதுமக்கள், பணம் வாங்கிக்கொண்டுதானே ஓட்டு போட்டீர்கள் என அதிகாரிகள் கேட்டதாகக் குற்றம்சாட்டினர். தத்தநரி முதல் செல்லூர் ஸ்டேஷன் ரோடு வரை பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாகப் பாதாள சாக்கடை குழாய்களும், குடிநீர் குழாய்களும் உடைந்ததாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இனியும் தாமதிக்காமல் உடைப்பை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: மாநகராட்சி அதிகாரிகள்Sewage pooling on the roads: Corporation officials acting negligently
ShareTweetSendShare
Previous Post

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

Next Post

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies