சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!
Oct 27, 2025, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Oct 27, 2025, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை செல்லூர் பகுதியில் கழிவுநீர் தேங்கி வருவதாலும், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 29ஆவது வார்டில் அமெரிக்கன் மிஷன் தெரு, பாலம் ஸ்டேஷன் ரோடு, சிவன் தெரு, அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது.

இதனால் துர்நாற்றமும், நோய் பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் சூழலில், குடிநீருடனும் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் குடிக்க கூடத் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் 6 மாதங்களாகப் புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தெருக்களில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளதால் சாலைகளில் நடமாட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் செல்வதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மேலும், குழந்தைகளும், முதியவர்களும் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் சூழலும் நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செல்லூர் கபடி சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து பேட்டியளித்த பொதுமக்கள், பணம் வாங்கிக்கொண்டுதானே ஓட்டு போட்டீர்கள் என அதிகாரிகள் கேட்டதாகக் குற்றம்சாட்டினர். தத்தநரி முதல் செல்லூர் ஸ்டேஷன் ரோடு வரை பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாகப் பாதாள சாக்கடை குழாய்களும், குடிநீர் குழாய்களும் உடைந்ததாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இனியும் தாமதிக்காமல் உடைப்பை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: மாநகராட்சி அதிகாரிகள்Sewage pooling on the roads: Corporation officials acting negligently
ShareTweetSendShare
Previous Post

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

Next Post

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

அச்சுறுத்தல் காரணமாக 41பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies