கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிய இளையோருக்கான கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நிலையில், இந்திய அணியைத் துணை கேப்டனாக வழிடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார் கண்ணகி நகர் கார்த்திகா…. யார் அவர் தற்போது பார்க்கலாம்.

பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்து நிற்கிறது. 18 வயதுக்குட்பட்டோருக்கான கபடி இறுதிப்போட்டியில் ஈரானை 75-க்கு 21 புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி.

இந்திய அணியைத் துணை கேப்டனாக வழிநடத்தியவர் சென்னை கண்ணகி நகர் புயல் கார்த்திகா. ஏழ்மையான குடும்பப் பின்னணியில், வறுமையின் பிடியிலும் இடைவிடாத பயிற்சியால் இந்திய அணியில் இடம்பிடித்த கார்த்திகா, தனது அபாரமான ரைடு மூலம் ஒட்டுமொத்த, ஈரான் அணியைத் தெறிக்க விட்டதோடு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய கார்த்திகாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் வெற்றியில் கார்த்திகாவின் பங்களிப்பைப் பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். தங்கம் வென்று திரும்பிய கார்த்திகாவுக்கு கண்ணகி நகர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் மாலை கிரீடம், பொன்னாடை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் கார்த்திகா. அப்போது வழிநெடுக கண்ணகி நகர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் சூழ்ந்து கார்த்திகாவை கொண்டாடிய விதம், கார்த்திகாவை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை கண்ணுக்கு எதிரே வெளிப்படுத்தியது.

அப்போது தனது பயிற்சியாளர் ராஜி-க்கு தனது தங்கப்பதக்கத்தை அளித்து மகிழ்ந்தார் கார்த்திகா. கண்ணகி நகர் மக்கள் அனைவரும் தன்னை ஆதரித்ததாகக் கூறிய கில்லி வீராங்கனை கார்த்திகா, கண்ணகி நகரில் இருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்கிறார் உற்சாகமாக.

2000 ஆண்டில் இருந்து கண்ணகி நகரில் வசிப்பதாகக் கூறிய கார்த்திகாவின் தாயார், 6 வயது முதல் கார்த்திகா கஷ்டப்பட்டு கபடி பயிற்சி பெற்று வருவதாகக் கூறினார்…பெற்றோர்கள் பெண் குழந்தைகளை நம்பி வெளியே அனுப்ப வேண்டும் என்றும், பெற்றோர் அளிக்கும் ஊக்கம்தான் குழந்தைகளுக்கு முக்கியம் என்று கூறுகிறார் கார்த்திகாவின் தாயார் சரண்யா.

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் கார்த்திகாவின் வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும் எனக் கண்ணகி நகர் பொதுமக்கள் கூறினர். அதே நேரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கண்ணகி நகர் மக்களுக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளதாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கபடி எக்ஸ்பர்ட் பயிற்சியாளர் கவிதா தெரிவித்துள்ளார்.

கார்த்திகா பயிற்சி செய்யும் மைதானம் மழை காலங்களில் முழுமையாகத் தண்ணீர் சூழ்ந்து விடும், எனவே பயிற்சி மேற்கொள்வதற்கு உரிய இடத்தை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், இன்னும் ஆயிரம் கார்த்திகாக்கள் உருவாவார்கள் என்பது கண்ணகி நகர் மக்களின் கோரிக்கை.

கண்ணகி நகர் என்றாலே தவறான பார்வை இருக்கும் நிலையில், அந்தப் பார்வையை மாற்றிப் புது அடையாளம் கொடுத்திருக்கிறார் கார்த்திகா என மெச்சுகின்றனர் கண்ணகி நகர் பொதுமக்கள்.

Tags: who won gold in Kabaddi: The lioness of Kannagi Nagarகண்ணகி நகர் சிங்கப்பெண்தங்கம் வென்ற கார்த்திகாwomens kabadikabadi gamekabadiKarthika
Share
Tweet
SendShare
Previous Post

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

Next Post

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies