சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை செல்லூர் பகுதியில் கழிவுநீர் தேங்கி வருவதாலும், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 29ஆவது வார்டில் அமெரிக்கன் மிஷன் தெரு, பாலம் ஸ்டேஷன் ரோடு, சிவன் தெரு, அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது.

இதனால் துர்நாற்றமும், நோய் பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் சூழலில், குடிநீருடனும் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் குடிக்க கூடத் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் 6 மாதங்களாகப் புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தெருக்களில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளதால் சாலைகளில் நடமாட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் செல்வதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மேலும், குழந்தைகளும், முதியவர்களும் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் சூழலும் நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செல்லூர் கபடி சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து பேட்டியளித்த பொதுமக்கள், பணம் வாங்கிக்கொண்டுதானே ஓட்டு போட்டீர்கள் என அதிகாரிகள் கேட்டதாகக் குற்றம்சாட்டினர். தத்தநரி முதல் செல்லூர் ஸ்டேஷன் ரோடு வரை பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாகப் பாதாள சாக்கடை குழாய்களும், குடிநீர் குழாய்களும் உடைந்ததாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இனியும் தாமதிக்காமல் உடைப்பை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: மாநகராட்சி அதிகாரிகள்Sewage pooling on the roads: Corporation officials acting negligently
Share
Tweet
SendShare
Previous Post

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

Next Post

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies