அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!
Oct 29, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

Web Desk by Web Desk
Oct 29, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில் மதுரை மாநாகராட்சிக்கு உட்பட்ட செல்லூர், தத்தனேரி, சிம்மக்கல், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போலத் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.

மொத்தமாக உள்ள 100 வார்டுகளிலும் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேங்கி நிற்கும் மழைநீரால் ஏற்கனவே துயரத்திற்குள்ளாகி வரும் மக்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 வார்டுகளில் 16 மழைநீர் வடிகால் பணிகள் 82 கிலோ மீட்டருக்கு நடைபெற்றிருப்பதாகவும், 2 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 60 கிலோ மீட்டர் தூரத்திலான கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் செய்திக் குறிப்பு ஒன்றை மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதோடு தாழ்வான பகுதிகளாக 146 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அனைத்துவிதமான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளும்போது சென்னை மாநகராட்சி தெரிவித்த தகவலுக்கும் களத்தின் உண்மை நிலவரமும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஏற்கனவே 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் எழுந்திருக்கும் சொத்துவரி முறைகேட்டில் பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணியிலும் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட தொகையை முறையாகப் பயன்படுத்தி மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடித்திருந்தால் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உள்ளூர் சாலைகள் மட்டுமல்லாது பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதோடு, மழைநீரோடு கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சுகாதார சீர்கேட்டை சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்தும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Shocking corruption complaint: Irregularity in the allocation of funds for rainwater drainage workஊழல் புகார்பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு
ShareTweetSendShare
Previous Post

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

Next Post

SIR – நடைமுறைகள் என்ன?

Related News

தென்காசியில் முதலமைச்சர் நிகழ்ச்சி – போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

SIR – நடைமுறைகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

தர்ஷன் சிங் சஹாசி கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு!

கர்நாடகா : இந்தியாவின் சொந்த டிரைவரில்லா கார் அறிமுகம்!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

ஜமைக்கா : மெலிசா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

சீனாவில் கிட்னிக்காக புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்!

உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்

மகாராஷ்டிரா : விதிகளை மீறிய போலீசாரை துரத்தி பிடித்த இளைஞர் – வீடியோ வைரல்!

பாகிஸ்தான் : இந்தியாவை ஆதரிப்போம் என வெளிப்படையாக பொது வெளியில் பேசிய மதகுரு!

மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies