அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!
Jan 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில் மதுரை மாநாகராட்சிக்கு உட்பட்ட செல்லூர், தத்தனேரி, சிம்மக்கல், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போலத் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.

மொத்தமாக உள்ள 100 வார்டுகளிலும் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேங்கி நிற்கும் மழைநீரால் ஏற்கனவே துயரத்திற்குள்ளாகி வரும் மக்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 வார்டுகளில் 16 மழைநீர் வடிகால் பணிகள் 82 கிலோ மீட்டருக்கு நடைபெற்றிருப்பதாகவும், 2 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 60 கிலோ மீட்டர் தூரத்திலான கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் செய்திக் குறிப்பு ஒன்றை மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதோடு தாழ்வான பகுதிகளாக 146 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அனைத்துவிதமான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளும்போது சென்னை மாநகராட்சி தெரிவித்த தகவலுக்கும் களத்தின் உண்மை நிலவரமும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஏற்கனவே 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் எழுந்திருக்கும் சொத்துவரி முறைகேட்டில் பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணியிலும் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட தொகையை முறையாகப் பயன்படுத்தி மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடித்திருந்தால் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உள்ளூர் சாலைகள் மட்டுமல்லாது பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதோடு, மழைநீரோடு கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சுகாதார சீர்கேட்டை சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்தும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Shocking corruption complaint: Irregularity in the allocation of funds for rainwater drainage workஊழல் புகார்பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies