அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில் மதுரை மாநாகராட்சிக்கு உட்பட்ட செல்லூர், தத்தனேரி, சிம்மக்கல், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போலத் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.

மொத்தமாக உள்ள 100 வார்டுகளிலும் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேங்கி நிற்கும் மழைநீரால் ஏற்கனவே துயரத்திற்குள்ளாகி வரும் மக்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 வார்டுகளில் 16 மழைநீர் வடிகால் பணிகள் 82 கிலோ மீட்டருக்கு நடைபெற்றிருப்பதாகவும், 2 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 60 கிலோ மீட்டர் தூரத்திலான கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் செய்திக் குறிப்பு ஒன்றை மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதோடு தாழ்வான பகுதிகளாக 146 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அனைத்துவிதமான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளும்போது சென்னை மாநகராட்சி தெரிவித்த தகவலுக்கும் களத்தின் உண்மை நிலவரமும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஏற்கனவே 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் எழுந்திருக்கும் சொத்துவரி முறைகேட்டில் பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணியிலும் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட தொகையை முறையாகப் பயன்படுத்தி மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடித்திருந்தால் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உள்ளூர் சாலைகள் மட்டுமல்லாது பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதோடு, மழைநீரோடு கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சுகாதார சீர்கேட்டை சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்தும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Shocking corruption complaint: Irregularity in the allocation of funds for rainwater drainage workஊழல் புகார்பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு
Share
Tweet
SendShare
Previous Post

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies