தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!
Jan 14, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அபுதாபியில் வசித்து வரும் 29 வயது இந்தியரான அனில்குமார் போலா, ஐக்கிய அரபு அமீரக லாட்டரி வரலாற்றில் முதல் முறையாக 100 மில்லியன் திர்ஹாம், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 240 கோடி ரூபாய்க்கான ஜாக்பாட்டை வென்று, தனது வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியுள்ளார். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பிரபலமான லாட்டரி திட்டங்களுள் ஒன்று “லக்கி டே டிரா”. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்கள் மூலம் தங்கள் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி அவர்களின் அதிஷ்டத்தை சோதிக்க முடியும்.

இந்தப் போட்டியின் ஒவ்வொரு டிராவிலும் பெரும் தொகைகள் பரிசாக வழங்கப்படுகின்றன. சில கோடிகளில் தொடங்கும் அந்தப் பரிசுத் தொகைகள் 100 மில்லியன் திர்ஹாம் ஜாக்பாட், அதாவது இந்திய மதிப்பில் 240 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகின்றன.

இந்த லாட்டரி திட்டம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த லாட்டரி திட்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் 100 மில்லியன் திர்ஹாம் ஜாக்பாட்டை வென்று அசத்தியுள்ளார்.

அபுதாபியில் வசித்து வரும் 29 வயது இளைஞரான அனில்குமார் போலா என்பவர் மீதே இந்த அதிஷ்டக் காற்று வீசியிருக்கிறது. கடந்த அக்டோபர் 18-ம் தேதி நடந்த 23-வது “லக்கி டே டிரா”-வில் பங்கேற்ற அனில்குமார் போலா அதில் வென்று 240 கோடி ரூபாய் என்ற பெருந்தொகையை அள்ளிச் சென்றுள்ளார்.

அவரது இந்த மகத்தான வெற்றியின் வீடியோவை, எக்ஸ் தளத்தில் ‘எதிர்பார்ப்பு முதல் கொண்டாட்டம் வரை’ என்ற தலைப்பில் UAE லாட்டரி நிறுவனம் பகிர்ந்துள்ளது. பொன்னிற துகள்கள் மழையாகப் பொழிய அதில் நனைந்தபடியே அனில்குமார், 100 மில்லியன் திர்ஹாமுக்கான பெரிய செக்கை பெற்றுக்கொள்ளும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் தனது வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்துகொண்ட அனில்குமார், தான் வெற்றிபெற எந்த மாயமும் செய்யவில்லை என கூறினார். லாட்டரியின் கடைசி எண் தனது தாயின் பிறந்தநாள் வருவதுபோல் தேர்வு செய்த நிலையில், அது தனக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்துள்ளதாகப் புன்சிரிப்புடன் தெரிவித்தார்.

தொடர்ந்து தனது வெற்றியை அறிந்த தருணத்தைத்தையும் அவர் உணர்ச்சிப்பெருக்குடன் நினைவுகூர்ந்தார். மேலும், பெருந்தொகையை வென்றபோது இருந்த தனது மனநிலை குறித்து விவரித்த அனில்குமார், இந்தத் தொகையை எப்படி சரியாக முதலீடு செய்வது, எப்படி செலவிடுவது என ஆழமாகச் சிந்தித்ததாகக் கூறினார். தன்னிடம் உள்ள பணத்தை சரியான பாதையில் செலவிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

வென்ற பணத்தின் மூலம் சூப்பர் கார் ஒன்றை வாங்கி, தனது குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் கொண்டாட எண்ணியுள்ளதாகத் தெரிவித்த அனில்குமார், குடும்பத்தினரை UAE-க்கு அழைத்து வந்து அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அத்துடன், தான் வென்ற தொகையில் ஒரு பங்கைத் தானமாக வழங்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறிய அனில்குமார், அனைவரும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால் ஒருநாள் அவர்களின் வாழ்விலும் அதிஷ்டம் மலரும் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். தனது வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியமைத்த UAE லாட்டரி நிறுவனத்திற்கும் அனில்குமார் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

Tags: Mother's birthday number gives her luck: Indian man wins Rs. 240 crore in lotteryலாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்அபுதாபிஐக்கிய அரபு அமீரக லாட்டரிலக்கி டே டிரா
ShareTweetSendShare
Previous Post

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

Next Post

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies