இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் நிகர அந்நிய நேரடி முதலீடு வளர்ந்துவரும் நிலையில், இந்திய வங்கிகள், மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உலகளாவிய முன்னணி நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதை, அனுமதிப்பதில் மத்திய ரிசர்வ் வங்கி நேர்மறையான, அதேசமயம் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தின் மையமாகவும் அந்தந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் வங்கிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் 1991-ம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டபின் வங்கிகளின் செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் லாபத்தை மேம்படுத்துவதற்கான பரந்த அளவிலான நடவடிக்கைகள் கொள்ளப்பட்டன.

2008ம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, இந்தியாவின் வங்கித்துறை கடந்த 11 ஆண்டுகளாகக் கணிசமாக மேம்பட்டுள்ளது. இதன் விளைவாகத் தற்போது நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு சுமார் 630 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. நிகர வருமானத்தால் இந்தியாவில் மிகப்பெரிய துறையாக வங்கித் துறை விளங்குகிறது.

கடந்த ஆண்டு 46 பில்லியன் அமெரிக்க டாலரை வங்கித் துறை ஈட்டியுள்ளது. இது ஆண்டுக்கு 31 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத் தக்கது. உலகளாவிய சராசரி வங்கி வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது அதிக லாபம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், உலகின் முன்னணி நிதி நிறுவனங்கள் பல இந்திய வங்கிகளில் அதிகம் முதலீடு செய்துள்ளன. கடந்த வாரம், கேரளாவில் உள்ள ஃபெடரல் வங்கியில் 9.99 சதவீத பங்குகளை வாங்குவதாக அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் நிறுவனம் அறிவித்தது.

இந்த மாதத் தொடக்கத்தில், RBL வங்கியில் 60 சதவீத பங்குகளை 3 பில்லியன் டாலர்களுக்கு துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் NBD நிறுவனம் கையகப்படுத்துவதாக அறிவித்தது. இது, இந்திய நிதித் துறையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு என்று கூறப்படுகிறது.

இதே போல், சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் முதலீடு செய்து, YES வங்கியின் 25 சதவீதப் பங்குகளை ஜப்பானின் SMBC நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், கோடக் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை 670 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் கொடுத்து, சூரிச் இன்சூரன்ஸ் நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது.

இது தவிர, சம்மான் கேபிடலில் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது அபுதாபியின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம். இதற்கிடையே, 4,385 கோடி ரூபாய் முதலீட்டில் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை பெய்ன் கேபிடல் நிறுவனம் வாங்கியுள்ளது.

CSB வங்கியில் பெரும்பான்மை பங்குகளை ஐந்து ஆண்டுகளுக்கு வைத்துக் கொள்ள, சிறப்பு ஒப்புதலை கனடாவில் உள்ள ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இது வழக்கமான 40 சதவீத வெளிநாட்டு உரிமை வரம்பை மாற்றிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதமாக வளரும் என்று மத்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் பல மூலதன தளர்வு நடவடிக்கைகள் அமலுக்கு வரவுள்ளது. முன்னதாகக் காப்பீடு மற்றும் தனியார் வங்கிகளில் வெளிநாட்டு உரிமைமீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசும், அரசாங்கமும் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.

அமெரிக்காவின் வர்த்தகப் போர் காரணமாகச் சீனாவின் நிதி அமைப்புகள் நெருக்கடியில் உள்ளது. புவிசார் அரசியல் மாற்றங்கள் வேகமாக அரங்கேறிவரும் நிலையில், உலகளாவிய மூலதனத்திற்கான இயற்கையான மாற்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 டிரில்லியன் அமெரிக்க டாலராகும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். வங்கி, காப்பீடு மற்றும் கடன் வழங்கலில் மூலதனத்தின் தேவை அதிகரிக்கும் நிலையில், இந்திய வங்கிகளில் பங்குகளைப் பெறுவது ஒரு சிறந்த முதலீடாக உலகின் முன்னணி நிதி நிறுவனங்கள் கருதுகின்றன.

Tags: bankInvestments pouring into Indian banks: Global financial institutions are competing head-to-headஇந்திய வங்கிகளில் குவியும் முதலீடு
Share
Tweet
SendShare
Previous Post

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

Next Post

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies