தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் - FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!
Oct 29, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் – FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!

Web Desk by Web Desk
Oct 29, 2025, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் UPSC தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது LIVE-IN PARTNER-ஆன FORENSIC மாணவி திட்டமிட்டு சம்பவத்தை அரங்கேற்றியது போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

டெல்லியில் உள்ள காந்தி விஹார் பகுதியில் உள்ள கட்டடத்தின் 4-வது மாடியில் கடந்த 6-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தபோது அங்கு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர் அதே கட்டடத்தில் வசித்து வந்த ராம் கேஷ் மீனா என்பதும், UPSC தேர்வுக்கு அவர் தயாராகி வந்ததும் தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்துபோல் தெரிந்தாலும், சிசிடிவி காட்சிகள் அதில் உள்ள மர்மங்களை வெளிச்சமிட்டு காட்டின. அக்டோபர் 5-ம் தேதி முகமூடி அணிந்த இருவர் அக்கட்டடத்திற்குள் நுழைந்ததும், 39 நிமிடங்களுக்குப் பின் ஒருவர் வெளியேறிய நிலையில், இரவு 2.57 மணியளவில் ராம் கேஷ் மீனாவின் LIVE-IN PARTNER-ரான அம்ரிதா சௌஹான் மற்றொருவருடன் வெளியேறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தன.

அதன் பிறகே தீ விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்த போலீசாருக்கு, அம்ரிதாவின் நடவடிக்கையின் சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போன் டவர் லொக்கேஷன் காந்தி விஹார் பகுதியில் இருந்ததை உறுதிசெய்த போலீசார், கடந்த 18-ம் தேதி மொராதாபாத்தில் வைத்து அம்ரிதாவை சுற்றிவளைத்து பிடித்தனர்.

தொடர் விசாரணையில் முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் நண்பர் சந்தீப் குமார் ஆகியோருடன் சேர்ந்து ராம் கேஷ் மீனாவை கொலை செய்ததாக அம்ரிதா ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் BSc FORENSIC SCIENCE மாணவியான அம்ரிதா சௌஹான், முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் SSC தேர்வாளரான சந்தீப் குமார் ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

தனது சில ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழிக்க, ராம் கேஷ் மீனா மறுத்ததால் கோபமடைந்ததாகத் தெரிவித்த அம்ரிதா, அவரைச் சுமித் மற்றும் சந்தீபுடன் சேர்ந்து கொன்று விபத்து போல் சித்தரிக்க திட்டம் தீட்டியதாகப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அதன்படி கடந்த 5-ம் தேதி மூவரும் சேர்ந்து மீனாவை அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றதும், பின்னர் வீட்டிலிருந்த எண்ணெய், நெய் மற்றும் மதுவை ஊற்றி உடலுக்குத் தீ வைத்ததும் போலீசார் விசாரணையில் அம்பலமானது.

FORENSIC மாணவியாக இருந்த அம்ரிதா கொலையை விபத்துபோல் மாற்றியமைக்க திட்டமிட்டு கொடுத்ததாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தில், கைது செய்யப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags: Youth burnt to death in capital - FORENSIC student's plan under investigation in Ambalamஎரித்து கொல்லப்பட்ட இளைஞர்FORENSICLIVE-IN PARTNERUPSC தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் படுகொலை
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Next Post

புற்றுநோயை குணமாக்கும் சிகிச்சை : அமெரிக்கா தயாரிக்கும் 2 சூப்பர் கம்ப்யூட்டர்கள்!

Related News

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

கர்நாடகா : இந்தியாவின் சொந்த டிரைவரில்லா கார் அறிமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு தின விழா – உலக தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு!

தர்ஷன் சிங் சஹாசி கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு!

தென்காசியில் முதலமைச்சர் நிகழ்ச்சி – போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

ஜமைக்கா : மெலிசா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

சீனாவில் கிட்னிக்காக புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்!

உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்

மகாராஷ்டிரா : விதிகளை மீறிய போலீசாரை துரத்தி பிடித்த இளைஞர் – வீடியோ வைரல்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies