தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் - FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!
Jan 14, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் – FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் UPSC தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது LIVE-IN PARTNER-ஆன FORENSIC மாணவி திட்டமிட்டு சம்பவத்தை அரங்கேற்றியது போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

டெல்லியில் உள்ள காந்தி விஹார் பகுதியில் உள்ள கட்டடத்தின் 4-வது மாடியில் கடந்த 6-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தபோது அங்கு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர் அதே கட்டடத்தில் வசித்து வந்த ராம் கேஷ் மீனா என்பதும், UPSC தேர்வுக்கு அவர் தயாராகி வந்ததும் தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்துபோல் தெரிந்தாலும், சிசிடிவி காட்சிகள் அதில் உள்ள மர்மங்களை வெளிச்சமிட்டு காட்டின. அக்டோபர் 5-ம் தேதி முகமூடி அணிந்த இருவர் அக்கட்டடத்திற்குள் நுழைந்ததும், 39 நிமிடங்களுக்குப் பின் ஒருவர் வெளியேறிய நிலையில், இரவு 2.57 மணியளவில் ராம் கேஷ் மீனாவின் LIVE-IN PARTNER-ரான அம்ரிதா சௌஹான் மற்றொருவருடன் வெளியேறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தன.

அதன் பிறகே தீ விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்த போலீசாருக்கு, அம்ரிதாவின் நடவடிக்கையின் சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போன் டவர் லொக்கேஷன் காந்தி விஹார் பகுதியில் இருந்ததை உறுதிசெய்த போலீசார், கடந்த 18-ம் தேதி மொராதாபாத்தில் வைத்து அம்ரிதாவை சுற்றிவளைத்து பிடித்தனர்.

தொடர் விசாரணையில் முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் நண்பர் சந்தீப் குமார் ஆகியோருடன் சேர்ந்து ராம் கேஷ் மீனாவை கொலை செய்ததாக அம்ரிதா ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் BSc FORENSIC SCIENCE மாணவியான அம்ரிதா சௌஹான், முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் SSC தேர்வாளரான சந்தீப் குமார் ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

தனது சில ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழிக்க, ராம் கேஷ் மீனா மறுத்ததால் கோபமடைந்ததாகத் தெரிவித்த அம்ரிதா, அவரைச் சுமித் மற்றும் சந்தீபுடன் சேர்ந்து கொன்று விபத்து போல் சித்தரிக்க திட்டம் தீட்டியதாகப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அதன்படி கடந்த 5-ம் தேதி மூவரும் சேர்ந்து மீனாவை அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றதும், பின்னர் வீட்டிலிருந்த எண்ணெய், நெய் மற்றும் மதுவை ஊற்றி உடலுக்குத் தீ வைத்ததும் போலீசார் விசாரணையில் அம்பலமானது.

FORENSIC மாணவியாக இருந்த அம்ரிதா கொலையை விபத்துபோல் மாற்றியமைக்க திட்டமிட்டு கொடுத்ததாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தில், கைது செய்யப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags: FORENSICLIVE-IN PARTNERUPSC தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் படுகொலைYouth burnt to death in capital - FORENSIC student's plan under investigation in Ambalamஎரித்து கொல்லப்பட்ட இளைஞர்
ShareTweetSendShare
Previous Post

உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய செர்னோபில் நாய்கள் : கதிர்வீச்சு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு!

Next Post

புற்றுநோயை குணமாக்கும் சிகிச்சை : அமெரிக்கா தயாரிக்கும் 2 சூப்பர் கம்ப்யூட்டர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies