தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் - FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் – FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் UPSC தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது LIVE-IN PARTNER-ஆன FORENSIC மாணவி திட்டமிட்டு சம்பவத்தை அரங்கேற்றியது போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

டெல்லியில் உள்ள காந்தி விஹார் பகுதியில் உள்ள கட்டடத்தின் 4-வது மாடியில் கடந்த 6-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தபோது அங்கு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர் அதே கட்டடத்தில் வசித்து வந்த ராம் கேஷ் மீனா என்பதும், UPSC தேர்வுக்கு அவர் தயாராகி வந்ததும் தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்துபோல் தெரிந்தாலும், சிசிடிவி காட்சிகள் அதில் உள்ள மர்மங்களை வெளிச்சமிட்டு காட்டின. அக்டோபர் 5-ம் தேதி முகமூடி அணிந்த இருவர் அக்கட்டடத்திற்குள் நுழைந்ததும், 39 நிமிடங்களுக்குப் பின் ஒருவர் வெளியேறிய நிலையில், இரவு 2.57 மணியளவில் ராம் கேஷ் மீனாவின் LIVE-IN PARTNER-ரான அம்ரிதா சௌஹான் மற்றொருவருடன் வெளியேறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தன.

அதன் பிறகே தீ விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்த போலீசாருக்கு, அம்ரிதாவின் நடவடிக்கையின் சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போன் டவர் லொக்கேஷன் காந்தி விஹார் பகுதியில் இருந்ததை உறுதிசெய்த போலீசார், கடந்த 18-ம் தேதி மொராதாபாத்தில் வைத்து அம்ரிதாவை சுற்றிவளைத்து பிடித்தனர்.

தொடர் விசாரணையில் முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் நண்பர் சந்தீப் குமார் ஆகியோருடன் சேர்ந்து ராம் கேஷ் மீனாவை கொலை செய்ததாக அம்ரிதா ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் BSc FORENSIC SCIENCE மாணவியான அம்ரிதா சௌஹான், முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் SSC தேர்வாளரான சந்தீப் குமார் ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

தனது சில ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழிக்க, ராம் கேஷ் மீனா மறுத்ததால் கோபமடைந்ததாகத் தெரிவித்த அம்ரிதா, அவரைச் சுமித் மற்றும் சந்தீபுடன் சேர்ந்து கொன்று விபத்து போல் சித்தரிக்க திட்டம் தீட்டியதாகப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அதன்படி கடந்த 5-ம் தேதி மூவரும் சேர்ந்து மீனாவை அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றதும், பின்னர் வீட்டிலிருந்த எண்ணெய், நெய் மற்றும் மதுவை ஊற்றி உடலுக்குத் தீ வைத்ததும் போலீசார் விசாரணையில் அம்பலமானது.

FORENSIC மாணவியாக இருந்த அம்ரிதா கொலையை விபத்துபோல் மாற்றியமைக்க திட்டமிட்டு கொடுத்ததாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தில், கைது செய்யப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags: Youth burnt to death in capital - FORENSIC student's plan under investigation in Ambalamஎரித்து கொல்லப்பட்ட இளைஞர்FORENSICLIVE-IN PARTNERUPSC தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் படுகொலை
ShareTweetSendShare
Previous Post

உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய செர்னோபில் நாய்கள் : கதிர்வீச்சு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு!

Next Post

புற்றுநோயை குணமாக்கும் சிகிச்சை : அமெரிக்கா தயாரிக்கும் 2 சூப்பர் கம்ப்யூட்டர்கள்!

Related News

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies