உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய செர்னோபில் நாய்கள் : கதிர்வீச்சு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு!
Jul 23, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய செர்னோபில் நாய்கள் : கதிர்வீச்சு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுக்கதிர் வீச்சில் பாதிக்கப்பட்ட உக்ரைனின் செர்னோபில்லில் வாழும் நாய்கள் திடீரென நீல நிறமாக மாறியுள்ளன. காரணம் இதுவரை தெளிவாகத் தெரியாத இந்த மாற்றம் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில், 1986-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய அணு உலை வெடிப்பின் நினைவாக இன்றளவும் உலகம் முழுவதும் அறியப்படும் இடமாகும். அங்குள்ள கதிர்வீச்சின் அளவு மனிதர்களுக்கான பாதுகாப்பு அளவைவிட 6 மடங்கு அதிகமாகச் சுமார் 11.28 மில்லி ரெம் அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து மனிதர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையில், செர்னோபில் விலங்கினங்களின் வாழ்விடமாக மாறியது. சுமார் 18 சதுர மைல் பரப்பளவுகொண்ட செர்னோபில் விலக்கு வலயத்தை 700-க்கும் மேற்பட்ட நாய்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள நாய்களை பராமரித்து வரும் “DOGS OF CHERNOBYL” என்ற அமைப்பு, 2017-ம் ஆண்டு முதல் அவற்றுக்கு உணவு, மருந்து போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே அங்குள்ள சில நாய்களின் ரோமங்கள் நீல நிறமாக மாறியிருப்பதை அந்த அமைப்பு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

அதில் ஒரு நாய் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ள புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் வரை இயல்பான நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கு, தற்போது இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், என்ன நடந்தது என்பதை அறிய அவற்றைப் பிடிக்க முயன்று வருவதாகவும் அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் சில வெளிப்புற வேதிப்பொருட்களாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டாலும், அந்த விளக்கங்கள் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிறமாற்றம் வேதிப்பொருளால் ஆன வெளிப்புற மாசாக இருக்கலாம் எனவும், அவை கழுவி அகற்றக்கூடியதாக இருக்கலாம் என்றும் சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாய்களின் நிறமாற்றம் அந்நாட்டு விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இத்தகைய கடுமையான சூழ்நிலையில் நாய்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதும் அவர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில், கதிர்வீச்சு, கனிம உலோகங்கள் மற்றும் மாசு ஆகியவற்றுக்கு எதிரான மரபணு மாற்றங்களால், இந்த நாய்கள் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அந்த நாய்களுக்கு ஏற்பட்டுள்ள நீல நிறமாற்றம், அவற்றின் புதிய உயிரியல் மாற்றமா அல்லது வெளிப்புற வேதிப்பொருள் தாக்கமா என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சியை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: Chernobyl dogs turn blue all over: Is it due to radiation? Scientists studyசெர்னோபில் நாய்கள்கதிர்வீச்சுவிஞ்ஞானிகள் ஆய்வுDOGS OF CHERNOBYL
ShareTweetSendShare
Previous Post

கென்யா விமான விபத்தில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 12 பேர் பலி!

Next Post

தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் – FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies