உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய செர்னோபில் நாய்கள் : கதிர்வீச்சு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு!
Jun 4, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய செர்னோபில் நாய்கள் : கதிர்வீச்சு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுக்கதிர் வீச்சில் பாதிக்கப்பட்ட உக்ரைனின் செர்னோபில்லில் வாழும் நாய்கள் திடீரென நீல நிறமாக மாறியுள்ளன. காரணம் இதுவரை தெளிவாகத் தெரியாத இந்த மாற்றம் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில், 1986-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய அணு உலை வெடிப்பின் நினைவாக இன்றளவும் உலகம் முழுவதும் அறியப்படும் இடமாகும். அங்குள்ள கதிர்வீச்சின் அளவு மனிதர்களுக்கான பாதுகாப்பு அளவைவிட 6 மடங்கு அதிகமாகச் சுமார் 11.28 மில்லி ரெம் அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து மனிதர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையில், செர்னோபில் விலங்கினங்களின் வாழ்விடமாக மாறியது. சுமார் 18 சதுர மைல் பரப்பளவுகொண்ட செர்னோபில் விலக்கு வலயத்தை 700-க்கும் மேற்பட்ட நாய்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள நாய்களை பராமரித்து வரும் “DOGS OF CHERNOBYL” என்ற அமைப்பு, 2017-ம் ஆண்டு முதல் அவற்றுக்கு உணவு, மருந்து போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே அங்குள்ள சில நாய்களின் ரோமங்கள் நீல நிறமாக மாறியிருப்பதை அந்த அமைப்பு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

அதில் ஒரு நாய் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ள புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் வரை இயல்பான நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கு, தற்போது இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், என்ன நடந்தது என்பதை அறிய அவற்றைப் பிடிக்க முயன்று வருவதாகவும் அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் சில வெளிப்புற வேதிப்பொருட்களாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டாலும், அந்த விளக்கங்கள் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிறமாற்றம் வேதிப்பொருளால் ஆன வெளிப்புற மாசாக இருக்கலாம் எனவும், அவை கழுவி அகற்றக்கூடியதாக இருக்கலாம் என்றும் சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாய்களின் நிறமாற்றம் அந்நாட்டு விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இத்தகைய கடுமையான சூழ்நிலையில் நாய்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதும் அவர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில், கதிர்வீச்சு, கனிம உலோகங்கள் மற்றும் மாசு ஆகியவற்றுக்கு எதிரான மரபணு மாற்றங்களால், இந்த நாய்கள் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அந்த நாய்களுக்கு ஏற்பட்டுள்ள நீல நிறமாற்றம், அவற்றின் புதிய உயிரியல் மாற்றமா அல்லது வெளிப்புற வேதிப்பொருள் தாக்கமா என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சியை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: Chernobyl dogs turn blue all over: Is it due to radiation? Scientists studyசெர்னோபில் நாய்கள்கதிர்வீச்சுவிஞ்ஞானிகள் ஆய்வுDOGS OF CHERNOBYL
ShareTweetSendShare
Previous Post

கென்யா விமான விபத்தில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 12 பேர் பலி!

Next Post

தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் – FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

அந்த நிறுவனத்தை நம்பியதால் மோசம் – கள ஆய்வில் குமுறிய திமுக தொண்டர்கள் – சிறப்பு தொகுப்பு!

மியான்மரில் பயங்கர வெடி விபத்து – குழந்தைகைள் உள்ளிட்ட 45 பேர் பலி!

எல் நினோவால் குறையும் பருவமழை : விவசாய உற்பத்தி பாதிப்பால் வறட்சி? – சிறப்பு கட்டுரை!

ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies