தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சகம்!
Jan 14, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியத்திலிருந்து 2.8 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக இந்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மாணவர் இடைநிற்றல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை ஆய்வறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம்குறித்த தரவுகளை இந்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2024-2025ம் ஆண்டுக்கான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிகள், 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகள் எனப் பல்வேறு வடிவங்களில் உள்ள பள்ளிகளின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளன.

அதன்படி தமிழகத்தில் பூஜ்ஜியமாக இருந்த தொடக்கப்பள்ளிகளின் மாணவர்களின் இடைநிற்றல் 2.7சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2021 – 2022ல், அதாவது திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கல்வியாண்டில் பூஜ்ஜியமாக இருந்த தொடக்கப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் 2022-2023ல் 2.3 சதவிகிதமாகவும், 2024-2025ல் 2.7 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.

அதே போல நடுநிலை பள்ளிகளைப் பொறுத்தவரை 2021-2022ல் பூஜ்ஜியமாக இருந்த மாணவர் இடைநிற்றல் 2024-2025ல் 2.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் 2021-2022ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளிகளின் மாணவர் இடைநிற்றல் 4.5 சதவிகிதமாக இருந்த நிலையில், 2024-2025 ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயர்ந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 595 அரசுப் பள்ளிகளும், 7 ஆயிரத்து 289 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12 ஆயிரத்து சுயநிதிப் பள்ளிகளும் இயங்கி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் அரசுப் பள்ளிகளிலேயே கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் மூலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் இடைநிற்றலில் பள்ளியை விட்டு விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடக்கப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவில் பூஜ்ஜியமாகவும், கேரளாவில் 0.8 சதவிகிதமாகவும், ஆந்திராவில் 1.4 சதவிகிதமாகவும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 2.7 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் பெற்றோர்களிடையே நிலவும் பிரச்னைகள், அவர்களின் சமூக பொருளாதார சூழல்கள் காரணமாகவும் இடைநிற்றல் அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக இருந்தாலும், மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திறன்மிகு வகுப்பறைகள், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் போன்ற ஏராளமான திட்டங்களைத் தீட்டுவதில் பள்ளிக்கல்வித்துறை செலுத்தும் கவனத்தை மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதிலும், இடைநிற்றலை குறைப்பதிலும் செலுத்த வேண்டும் என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது.

Tags: Dropout rate in Tamil Nadu increases to 2.8 percent - Indian Ministry of Educationமத்திய கல்வித்துறை அமைச்சகம்
ShareTweetSendShare
Previous Post

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

Next Post

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies