தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சகம்!
Oct 29, 2025, 11:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

Web Desk by Web Desk
Oct 29, 2025, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியத்திலிருந்து 2.8 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக இந்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மாணவர் இடைநிற்றல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை ஆய்வறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம்குறித்த தரவுகளை இந்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2024-2025ம் ஆண்டுக்கான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிகள், 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகள் எனப் பல்வேறு வடிவங்களில் உள்ள பள்ளிகளின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளன.

அதன்படி தமிழகத்தில் பூஜ்ஜியமாக இருந்த தொடக்கப்பள்ளிகளின் மாணவர்களின் இடைநிற்றல் 2.7சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2021 – 2022ல், அதாவது திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கல்வியாண்டில் பூஜ்ஜியமாக இருந்த தொடக்கப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் 2022-2023ல் 2.3 சதவிகிதமாகவும், 2024-2025ல் 2.7 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.

அதே போல நடுநிலை பள்ளிகளைப் பொறுத்தவரை 2021-2022ல் பூஜ்ஜியமாக இருந்த மாணவர் இடைநிற்றல் 2024-2025ல் 2.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் 2021-2022ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளிகளின் மாணவர் இடைநிற்றல் 4.5 சதவிகிதமாக இருந்த நிலையில், 2024-2025 ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயர்ந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 595 அரசுப் பள்ளிகளும், 7 ஆயிரத்து 289 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12 ஆயிரத்து சுயநிதிப் பள்ளிகளும் இயங்கி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் அரசுப் பள்ளிகளிலேயே கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் மூலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் இடைநிற்றலில் பள்ளியை விட்டு விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடக்கப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவில் பூஜ்ஜியமாகவும், கேரளாவில் 0.8 சதவிகிதமாகவும், ஆந்திராவில் 1.4 சதவிகிதமாகவும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 2.7 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் பெற்றோர்களிடையே நிலவும் பிரச்னைகள், அவர்களின் சமூக பொருளாதார சூழல்கள் காரணமாகவும் இடைநிற்றல் அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக இருந்தாலும், மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திறன்மிகு வகுப்பறைகள், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் போன்ற ஏராளமான திட்டங்களைத் தீட்டுவதில் பள்ளிக்கல்வித்துறை செலுத்தும் கவனத்தை மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதிலும், இடைநிற்றலை குறைப்பதிலும் செலுத்த வேண்டும் என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது.

Tags: Dropout rate in Tamil Nadu increases to 2.8 percent - Indian Ministry of Educationமத்திய கல்வித்துறை அமைச்சகம்
ShareTweetSendShare
Previous Post

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

Next Post

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

Related News

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

SIR – நடைமுறைகள் என்ன?

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies