ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : "ஜெய்ஷ்-இ-முகம்மது" தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!
Oct 29, 2025, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

Web Desk by Web Desk
Oct 29, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மஸூத் அசார், “ஜமாஅத்-உல்-முமினாத்” என்ற பெண்கள் பிரிவை உருவாக்கி அவர்களை மதத்தின் பெயரால் தீவிரவாத செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

ஜெய்ஷ்-இ-மொஹம்மத் என்ற தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான மஸூத் அசார் “ஜமாஅத்-உல்-முமினாத்” என்ற பெயரில் பெண்களுக்கான புதிய பிரிவு ஒன்றை உருவாக்கி, அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரிவுக்குப் பெண்களை சேர்ப்பது குறித்து அவர் பேசிய 21 நிமிட ஆடியோ வெளியான நிலையில், அதில் மஸூத் அசார் தனது திட்டம்குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எதிராளிகள் தங்கள் படைகளிலும், ஊடகங்களிலும் இந்து பெண்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய பெண்களை முன்நிறுத்துவது அவசியம் என மஸூத் அசார் தனது உரையில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பிரிவில் சேரும் ஒவ்வொரு பெண்ணும் தனது இறப்புக்கு பின் நேரடியாகச் சொர்க்கத்துக்கு செல்வார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தப் பிரிவில் சேர்வதற்காகப் பாகிஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளைகள் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள மஸூத் அசார், அவை ‘முந்தாஸிமா’ எனப்படும் பெண் பொறுப்பாளர்களால் வழிநடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தங்கள் தலைவர்களின் மனைவிகள், உயிரிழந்த தீவிரவாதிகளின் உறவினர்கள் மற்றும் ஏழ்மையில் வாடும் பெண்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்கள் மூலம் புதிய பிரிவுக்கு ஆள் சேர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆண்களைப் போலவே இந்தப் பிரிவில் சேரும் பெண்களுக்கும் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகவும், முதல் 15 நாட்கள் “தௌரா-இ-தஸ்கியா” எனப்படும் ஆயுத பயிற்சியும், அதன் தொடர்ச்சியாக “தௌரா-அயாத்-உல்-நிசா” எனப்படும் மத போதனைகளும் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர மஸூத் அசார் எழுதிய “ஏ முஸல்மான் பெஹ்னர்” என்ற சிறு புத்தகமும் அவர்களுக்குப் பாடதிட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் இந்த புதிய பிரிவில் சேரும் பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தவிர பிற ஆண்களுடன் பேசக்கூடாது என்ற கடுமையான விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஜெய்ஷ் அமைப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்காக ரகசிய ஆன்லைன் வகுப்புகளையும் தொடங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மஸூத் அசாரின் சகோதரி சமைரா, உம்மே மஸூத் என்ற பெயரில் வாரத்தில் 5 நாட்கள் இந்த வகுப்புகளை நடத்துவதாகப் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மஸூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஜெய்ஷ் அமைப்பில் தலைமை பொறுப்புகளை வகித்து வரும் நிலையில், பெண்களை வைத்துப் புதிய பிரிவை உருவாக்குவதன் மூலம் மஸூத் தனது அமைப்பின் சக்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு இந்தியாவை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அந்த அமைப்பின் தற்போதைய முயற்சி இந்தியாவுக்கு மட்டுமின்றி தெற்காசிய பிராந்தியத்திற்கே மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Tags: Muslim women's army against Hindu female soldiers: Threat from "JeS" terrorist Masood Azhar
ShareTweetSendShare
Previous Post

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

Next Post

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

Related News

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

SIR – நடைமுறைகள் என்ன?

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies