ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : "ஜெய்ஷ்-இ-முகம்மது" தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மஸூத் அசார், “ஜமாஅத்-உல்-முமினாத்” என்ற பெண்கள் பிரிவை உருவாக்கி அவர்களை மதத்தின் பெயரால் தீவிரவாத செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

ஜெய்ஷ்-இ-மொஹம்மத் என்ற தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான மஸூத் அசார் “ஜமாஅத்-உல்-முமினாத்” என்ற பெயரில் பெண்களுக்கான புதிய பிரிவு ஒன்றை உருவாக்கி, அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரிவுக்குப் பெண்களை சேர்ப்பது குறித்து அவர் பேசிய 21 நிமிட ஆடியோ வெளியான நிலையில், அதில் மஸூத் அசார் தனது திட்டம்குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எதிராளிகள் தங்கள் படைகளிலும், ஊடகங்களிலும் இந்து பெண்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய பெண்களை முன்நிறுத்துவது அவசியம் என மஸூத் அசார் தனது உரையில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பிரிவில் சேரும் ஒவ்வொரு பெண்ணும் தனது இறப்புக்கு பின் நேரடியாகச் சொர்க்கத்துக்கு செல்வார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தப் பிரிவில் சேர்வதற்காகப் பாகிஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளைகள் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள மஸூத் அசார், அவை ‘முந்தாஸிமா’ எனப்படும் பெண் பொறுப்பாளர்களால் வழிநடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தங்கள் தலைவர்களின் மனைவிகள், உயிரிழந்த தீவிரவாதிகளின் உறவினர்கள் மற்றும் ஏழ்மையில் வாடும் பெண்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்கள் மூலம் புதிய பிரிவுக்கு ஆள் சேர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆண்களைப் போலவே இந்தப் பிரிவில் சேரும் பெண்களுக்கும் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகவும், முதல் 15 நாட்கள் “தௌரா-இ-தஸ்கியா” எனப்படும் ஆயுத பயிற்சியும், அதன் தொடர்ச்சியாக “தௌரா-அயாத்-உல்-நிசா” எனப்படும் மத போதனைகளும் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர மஸூத் அசார் எழுதிய “ஏ முஸல்மான் பெஹ்னர்” என்ற சிறு புத்தகமும் அவர்களுக்குப் பாடதிட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் இந்த புதிய பிரிவில் சேரும் பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தவிர பிற ஆண்களுடன் பேசக்கூடாது என்ற கடுமையான விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஜெய்ஷ் அமைப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்காக ரகசிய ஆன்லைன் வகுப்புகளையும் தொடங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மஸூத் அசாரின் சகோதரி சமைரா, உம்மே மஸூத் என்ற பெயரில் வாரத்தில் 5 நாட்கள் இந்த வகுப்புகளை நடத்துவதாகப் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மஸூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஜெய்ஷ் அமைப்பில் தலைமை பொறுப்புகளை வகித்து வரும் நிலையில், பெண்களை வைத்துப் புதிய பிரிவை உருவாக்குவதன் மூலம் மஸூத் தனது அமைப்பின் சக்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு இந்தியாவை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அந்த அமைப்பின் தற்போதைய முயற்சி இந்தியாவுக்கு மட்டுமின்றி தெற்காசிய பிராந்தியத்திற்கே மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Tags: Muslim women's army against Hindu female soldiers: Threat from "JeS" terrorist Masood Azhar
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

Next Post

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies