சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
Mar 15, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்தார் வல்லபாய் படேலின் 150- வது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள சிலைக்குப் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் 2014ஆம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம், நர்மதா கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சிலைக்குப் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோருடன் சேர்ந்து பிரதமர் மோடி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்காகத் தன்னை அர்ப்பணித்து கொள்வேன் எனப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இதனை அடுத்து, பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பிரதமருக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு குஜராத்தின் ஐபிஎஸ் அதிகாரி சிம்ரன் பரத்வாஜ் தலைமை தாங்கினார்.

பின்னர், தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பில், சிஆர்பிஎஃப் படை பிரிவில் இருந்து சௌர்ய சக்ரா விருது பெற்ற ஐந்து பேரும், பிஎஸ்எஃப் பிரிவில் இருந்து 16 வீரப் பதக்கங்கள் வென்றவர்களும் அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து, BSF, CRPF, CISF, ITBP பிரிவு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, குஜராத் காவல் துறையின் குதிரைப் படை, ஒட்டகப் படையின் அணிவகுப்பும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் காவல்துறை சார்பில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இருசக்கர வாகனங்களில் வாள், துப்பாக்கி, தேசியக் கொடியை ஏந்தி வந்து காவல் துறையினர் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வைப் பிரதமர் மோடி கைத்தட்டி கண்டு ரசித்தார்.

Tags: Sardar Vallabhbhai Patel's birthday: Prime Minister Modi pays floral tributesசர்தார் வல்லபாய் பட்டேல்
ShareTweetSendShare
Previous Post

பிரதமரை விமர்சித்த விவகாரம் – ராகுல் மீது புகார்!

Next Post

தஞ்சாவூர் : தொழிலாளர்கள் பற்றாக்குறை – லாரிகளில் தேக்கம் அடைந்த நெல் மூட்டைகள்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies