தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அக்டோபர் 14 முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உட்பட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
அதேபோல், 2வது முறை நிறைவேற்றப்பட்ட தமிழக நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
















