மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 40வது சதய விழா அரசு விழாவாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைஞர்களின் நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2ஆம் நாள் நிகழ்ச்சியில் கோயில் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய கோயிலில் இருந்து யானை மீது திருமுறைகள் எடுத்து வரபட்டன. இதனை தொடர்ந்து, சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
















