தெலங்கானா மாநில நியமன அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பதவியேற்றார்.
தெலங்கானாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து, முகமது அசாருதீனுக்கு அதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வியடைந்தார்.
தற்போது அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இடைத்தேர்தலில் தொகுதியை கைப்பற்ற அசாருதீனுக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாகப் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
















