உலக புகழை துறந்து ஆன்மிக பாதைக்கு மாறிய "ஆஜானுபாகு" : பிருந்தாவன் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையாற்றிய வீடியோவால் நெகிழ்ச்சி!
Nov 1, 2025, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலக புகழை துறந்து ஆன்மிக பாதைக்கு மாறிய “ஆஜானுபாகு” : பிருந்தாவன் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையாற்றிய வீடியோவால் நெகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Nov 1, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் WWE போட்டியாளரும், பேஸ்பால் வீரருமான ரிங்கு சிங், பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் ஜி மகராஜின் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகளவில் புகழ்பெற்றிருந்த அவர் தற்போது ஆன்மிக பாதைக்கு மாறியுள்ளது பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங், தனது சிறு வயது முதலே மல்யுத்தம் மற்றும் பேஸ்பால் ஆகிய விளையாட்டுகளில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தார். ஆரம்ப காலத்தில் பேஸ்பால் தகுதி தேர்வில் 87 மைல் வேகத்தில் பந்தை எறிந்ததன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த ரிங்கு சிங், அமெரிக்காவில் நடைபெறும் தொழில்முறை பேஸ்பால் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.

இவரது கதையும், சக விளையாட்டு வீரரான தினேஷ் படேலின் கதையும் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான டிஸ்னி திரைப்படமான மில்லியன் டாலர் ஆர்ம் மூலம் உலகப் புகழ் பெற்றது. பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல WWE சண்டை போட்டிகளில் தன்னை இணைத்துக்கொண்ட ரிங்கு சிங், தனது பாரம்பரிய அடையாளத்துடன் முதல் முறையாக “வீர் மஹான்” என்ற பெயரில் களமிறங்கினார்.

அங்குத் தனது மல்யுத்த யுக்திகளை பயன்படுத்தி விளையாடியதன் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார். குறிப்பாக முன்னணி வீரர்களான ஜான் சீனா மற்றும் தி கிரேட் காளி ஆகியோருடன் மோதி வென்றது, ரிங்கு சிங்கின் புகழை மேலோங்கச் செய்தது. அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் ஜி மகராஜின் ஆசிரமத்தில் தோன்றிய ரிங்கு சிங், அங்குத் தன்னார்வ சேவைகளில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்நிலையில், உலக புகழிலிருந்து ஆன்மிக பாதைக்கு மாறிய அவரது முடிவைப் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ஒருகாலத்தில், உலக அரங்கில் தனது உடல் வலிமை மற்றும் தனித்திறமைகளுக்காக அறியப்பட்ட ரிங்கு சிங், வீடியோவில் மிக எளிமையான, ஆன்மிக தோற்றத்தில் காட்சியளித்தார்.

பிரேமானந்த் ஜி மகராஜ் ஆசிரமத்தில் தரையை துடைப்பது போன்ற பல்வேறு சேவைகளில் அவர் ஈடுபட்ட காட்சிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவர் பிரேமானந்த் ஜி மகராஜுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் “நீ உலகத்திற்கு தகுதியானவன் என்று உணர்ந்தால் என்னிடம் வா” என மகராஜ் அவருக்கு உபதேசம் வழங்க, அதற்கு ரிங்கு சிங் பணிவுடன் தலையசைத்து பதிலளித்திருந்தார்.

இவ்விருவருக்கு இடையிலான இந்த உரையாடல் அதனைக் கண்ட பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ள நிலையில், உலகறிந்த ஆஜானுபாகுவான 6 அடி 4 அங்குல நபர், சுவாமி ஜி-யின் முன்னிலையில் ஒரு சிறுவனாக மாறிவிட்டார் என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

பேஸ்பாலில் தொடங்கி WWE போட்டிகளில் தொடர்ந்த ரிங்கு சிங்கின் வாழ்க்கை, தற்போது பிருந்தாவன் ஆசிமத்தின் ஆன்மிக கதவுகளுக்குள் நுழைந்துள்ளது அவரது மொத்த வாழ்க்கை பயணத்தையும் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags: WWEரிங்கு சிங்"Aajanubahu"who renounced worldly fame and turned to the spiritual path: Video of him volunteering at the Brindavan Ashram leaves us movedWWE போட்டி
ShareTweetSendShare
Previous Post

இந்திய சந்தைகளில் புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் தயாரிப்புகள் : 4-வது காலாண்டில் 102.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி சாதனை!

Next Post

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

Related News

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவை பகைத்ததால் வினை : துபாய் மூலம் இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம்!

முக்கிய கமாண்டர்களின் தொடர் கொலைகளில் விலகாத மர்மம் : உயிருக்கு அஞ்சி மறைந்து வாழும் லஷ்கர் தலைவர்!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

இந்திய சந்தைகளில் புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் தயாரிப்புகள் : 4-வது காலாண்டில் 102.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி சாதனை!

டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம் : மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் அமெரிக்கா?

Load More

அண்மைச் செய்திகள்

உலக புகழை துறந்து ஆன்மிக பாதைக்கு மாறிய “ஆஜானுபாகு” : பிருந்தாவன் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையாற்றிய வீடியோவால் நெகிழ்ச்சி!

விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத “ஜெ.டி.வான்ஸ்” : அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை…!

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies