உலக புகழை துறந்து ஆன்மிக பாதைக்கு மாறிய "ஆஜானுபாகு" : பிருந்தாவன் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையாற்றிய வீடியோவால் நெகிழ்ச்சி!
Sep 13, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலக புகழை துறந்து ஆன்மிக பாதைக்கு மாறிய “ஆஜானுபாகு” : பிருந்தாவன் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையாற்றிய வீடியோவால் நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் WWE போட்டியாளரும், பேஸ்பால் வீரருமான ரிங்கு சிங், பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் ஜி மகராஜின் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகளவில் புகழ்பெற்றிருந்த அவர் தற்போது ஆன்மிக பாதைக்கு மாறியுள்ளது பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங், தனது சிறு வயது முதலே மல்யுத்தம் மற்றும் பேஸ்பால் ஆகிய விளையாட்டுகளில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தார். ஆரம்ப காலத்தில் பேஸ்பால் தகுதி தேர்வில் 87 மைல் வேகத்தில் பந்தை எறிந்ததன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த ரிங்கு சிங், அமெரிக்காவில் நடைபெறும் தொழில்முறை பேஸ்பால் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.

இவரது கதையும், சக விளையாட்டு வீரரான தினேஷ் படேலின் கதையும் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான டிஸ்னி திரைப்படமான மில்லியன் டாலர் ஆர்ம் மூலம் உலகப் புகழ் பெற்றது. பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல WWE சண்டை போட்டிகளில் தன்னை இணைத்துக்கொண்ட ரிங்கு சிங், தனது பாரம்பரிய அடையாளத்துடன் முதல் முறையாக “வீர் மஹான்” என்ற பெயரில் களமிறங்கினார்.

அங்குத் தனது மல்யுத்த யுக்திகளை பயன்படுத்தி விளையாடியதன் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார். குறிப்பாக முன்னணி வீரர்களான ஜான் சீனா மற்றும் தி கிரேட் காளி ஆகியோருடன் மோதி வென்றது, ரிங்கு சிங்கின் புகழை மேலோங்கச் செய்தது. அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் ஜி மகராஜின் ஆசிரமத்தில் தோன்றிய ரிங்கு சிங், அங்குத் தன்னார்வ சேவைகளில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்நிலையில், உலக புகழிலிருந்து ஆன்மிக பாதைக்கு மாறிய அவரது முடிவைப் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ஒருகாலத்தில், உலக அரங்கில் தனது உடல் வலிமை மற்றும் தனித்திறமைகளுக்காக அறியப்பட்ட ரிங்கு சிங், வீடியோவில் மிக எளிமையான, ஆன்மிக தோற்றத்தில் காட்சியளித்தார்.

பிரேமானந்த் ஜி மகராஜ் ஆசிரமத்தில் தரையை துடைப்பது போன்ற பல்வேறு சேவைகளில் அவர் ஈடுபட்ட காட்சிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவர் பிரேமானந்த் ஜி மகராஜுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் “நீ உலகத்திற்கு தகுதியானவன் என்று உணர்ந்தால் என்னிடம் வா” என மகராஜ் அவருக்கு உபதேசம் வழங்க, அதற்கு ரிங்கு சிங் பணிவுடன் தலையசைத்து பதிலளித்திருந்தார்.

இவ்விருவருக்கு இடையிலான இந்த உரையாடல் அதனைக் கண்ட பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ள நிலையில், உலகறிந்த ஆஜானுபாகுவான 6 அடி 4 அங்குல நபர், சுவாமி ஜி-யின் முன்னிலையில் ஒரு சிறுவனாக மாறிவிட்டார் என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

பேஸ்பாலில் தொடங்கி WWE போட்டிகளில் தொடர்ந்த ரிங்கு சிங்கின் வாழ்க்கை, தற்போது பிருந்தாவன் ஆசிமத்தின் ஆன்மிக கதவுகளுக்குள் நுழைந்துள்ளது அவரது மொத்த வாழ்க்கை பயணத்தையும் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags: WWEரிங்கு சிங்"Aajanubahu"who renounced worldly fame and turned to the spiritual path: Video of him volunteering at the Brindavan Ashram leaves us movedWWE போட்டி
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய சந்தைகளில் புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் தயாரிப்புகள் : 4-வது காலாண்டில் 102.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி சாதனை!

Next Post

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies