விண்வெளித்துறையில் "பாகுபலி மொமன்ட்" - CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 3, 2025, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி, இஸ்ரோ மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ , எல்விஎம் 3 எம் 5 பாகுபலி ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு தொடர்ந்து மகுடம் சூட்டி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் புதிய படைப்புக்கு, எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், ராக்கெட் ஏவுதலுக்கான கவுன்ட் டவுன் சனிக்கிழமை மாலை தொடங்கியது.

நேரம் நெருங்க நெருங்க விஞ்ஞானிகள் பரபரப்பாக காணப்பட்டனர். எல்விஎம் 3 எம் 5 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்துவதற்கான முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஹார்ட் பீட் விண்ணை முட்டியது. இறுதியாக வரலாற்று தருணம் நெருங்கியது…. கவுண்ட் டவுன் 3, 2, 1 என நிறைவடைந்ததும் தீப்பிழம்புகளை கக்கியவாறு, எல்விஎம் 3 எம் 5 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அடுத்தடுத்த நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்த போது, அதனை விஞ்ஞானிகள் விழிப்புடன் கண்காணித்து வந்தனர். மிகவும் சவாலான கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதும் விஞ்ஞானிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சரியான நேரத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்ரோ தலைவர் நாராயணன், சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ விண்ணில் ஏவும் திட்டம் 100 சதவீதம் வெற்றிபெற்றதாக தெரிவித்தார்.

கடற்படை மற்றும் ராணுவ தகவல் தொடர்புக்காக ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிஎம்எஸ் 03 செயற்கைக்கோள், 4 ஆயிரத்து 410 கிலோ எடைகொண்டது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்ல வேண்டும் என்பதற்காக, பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்பட்ட எல்விஎம் 3- எம்5 ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.

பாகுபலி திரைப்படத்தில் பல்வாள் தேவனின் சிலையை விட அமரேந்திர பாகுபலியின் சிலை, மக்களின் பார்வையில் உயர்ந்து தெரியும். விண்வெளித்துறையில் இந்தியாவின் புகழையும் அப்படித்தான் உயர்த்தியிருக்கிறது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்.

Tags: LVM 3M5 Baahubali rocketSatish Dhawan Space CenterSriharikotaISRO scientistsCMS-3 satellitesatellite CMS-03
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

Next Post

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies