விண்வெளித்துறையில் "பாகுபலி மொமன்ட்" - CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 3, 2025, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி, இஸ்ரோ மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ , எல்விஎம் 3 எம் 5 பாகுபலி ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு தொடர்ந்து மகுடம் சூட்டி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் புதிய படைப்புக்கு, எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், ராக்கெட் ஏவுதலுக்கான கவுன்ட் டவுன் சனிக்கிழமை மாலை தொடங்கியது.

நேரம் நெருங்க நெருங்க விஞ்ஞானிகள் பரபரப்பாக காணப்பட்டனர். எல்விஎம் 3 எம் 5 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்துவதற்கான முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஹார்ட் பீட் விண்ணை முட்டியது. இறுதியாக வரலாற்று தருணம் நெருங்கியது…. கவுண்ட் டவுன் 3, 2, 1 என நிறைவடைந்ததும் தீப்பிழம்புகளை கக்கியவாறு, எல்விஎம் 3 எம் 5 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அடுத்தடுத்த நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்த போது, அதனை விஞ்ஞானிகள் விழிப்புடன் கண்காணித்து வந்தனர். மிகவும் சவாலான கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதும் விஞ்ஞானிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சரியான நேரத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்ரோ தலைவர் நாராயணன், சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ விண்ணில் ஏவும் திட்டம் 100 சதவீதம் வெற்றிபெற்றதாக தெரிவித்தார்.

கடற்படை மற்றும் ராணுவ தகவல் தொடர்புக்காக ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிஎம்எஸ் 03 செயற்கைக்கோள், 4 ஆயிரத்து 410 கிலோ எடைகொண்டது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்ல வேண்டும் என்பதற்காக, பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்பட்ட எல்விஎம் 3- எம்5 ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.

பாகுபலி திரைப்படத்தில் பல்வாள் தேவனின் சிலையை விட அமரேந்திர பாகுபலியின் சிலை, மக்களின் பார்வையில் உயர்ந்து தெரியும். விண்வெளித்துறையில் இந்தியாவின் புகழையும் அப்படித்தான் உயர்த்தியிருக்கிறது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்.

Tags: SriharikotaISRO scientistsCMS-3 satellitesatellite CMS-03LVM 3M5 Baahubali rocketSatish Dhawan Space Center
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

Next Post

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies