ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!
Jun 5, 2026, 04:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

ஆந்திர அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய துயரம்!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் அருகே வெங்கடேஸ்வரச் சுவாமி கோயிலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ன? பறிபோன உயிர்களுக்கு யார்ப் பொறுப்பு? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

ஆந்திராவின் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரச் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கார்த்திகை ஏகாதசி நாளையொட்டி அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பூஜைகளைக் காண அங்கு திரளான பக்தர்கள் குவிந்தனர். அப்போது ஆயிரக்கணக்கானோர்க் கூடி நின்ற பகுதியில் திடீரென, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இது அங்கிருந்தவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பக்தர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் செல்ல முயன்றதில் பலர் நிலைதடுமாறி தரையில் விழுந்து மிதிபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர்ப் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கோயில் வளாகத்தில் ஒரேயொரு நுழைவு மற்றும் வெளியேறும் பாதை இருந்ததாகவும், கூட்ட மேலாண்மைக் குறைபாடுகள் அதிகளவில் இருந்தது தெளிவாக வெளிப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அத்துடன், இந்த விழாவிற்குத் தேவையான அனுமதிகளைக் காவல்துறையிடம் முறையாகப் பெறாமல், கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக ஏற்பாடு செய்ததே இந்தத் துயர சம்பவத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தை, எதிர்பாராத மிகுந்த வருத்தமளிக்கும் நிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கவும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் துயர நிகழ்வுக்குக் கோயில் நிர்வாகமே முழு பொறுப்பு எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், கூட்ட மேலாண்மைக் குறைபாடு குறித்து அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டும் அனுமதி பெறாமல் நிகழ்வு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அத்துடன், இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களையும் வெளிச்சமிட்டுக் காட்ட, ஒரு உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர்ச் சந்திரபாபு நாயுடு கூறினார்.

இந்த விபத்தை அரசின் நிர்வாகத்திறன் குறைபாடால் ஏற்பட்ட அசம்பாவிதம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்தக் கோயில் மாநில அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அரசு கண்காணிப்பு குறைந்த அளவில் இருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல, பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு நிர்வாகங்கள் முறையாக மேற்கொள்ளவில்லை என அதிருப்தி வெளிப்படுத்தியுள்ள எதிர்க்கட்சிகள், இந்தச் சம்பவத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் தெளிவாகப் புலப்படுவது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்தத் துயர சம்பவம் தொடர்பாகத் தற்போது மாவட்ட காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு, நிர்வாகப் பிழைகள் மற்றும் அரசியல் சர்ச்சைகள் என அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்துள்ள நிலையில், விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை இந்தச் சம்பவம் ஆந்திர அரசியலின் மைய பிரச்னையாகத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ஆந்திராSrikakulam temple stampede leaves 9 dead: A tragedy that has sent shockwaves through Andhra Pradesh politicsஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல்ஆந்திர அரசியல்
ShareTweetSendShare
Previous Post

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

Related News

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies