நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!
Mar 15, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிறிஸ்தவர்களைக் கொன்று குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் களமிறங்கும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஆப்ரிக்க கண்டத்தில் சுமார் 20 கோடி பேர் வாழும் மிகப்பெரிய நாடு நைஜீரியா. இங்கு வடக்கு பகுதியில் இஸ்லாமியர்களும், தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு பகுதிகளில் இரு மதத்தினரும் வாழ்ந்து வரும் நிலையில், யார் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்பதில் அவர்களுக்குள் கருத்து மோதல் நிலவி வருகிறது.

இதன் காரணமாக, நைஜீரியாவின் தெற்கு மாகாணங்களில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், பிளேட்டோ மற்றும் பெனுவே மாகாணங்களில், ஈஸ்டர் பண்டிகை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 240 கிறிஸ்தவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

அதேபோல் ஜுன் மாதம், பெனுவே மாகாணத்தில் உள்ள யெல்வாடா கிராமத்தில் வசித்தும் வரும் 200 கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயதமேந்திய தீவிரவாதிகள், கிறிஸ்தவர்கள் தங்கியிருந்த வீடுகளைக் குறிவைத்து எரித்ததில் 200 பேர் உடல் கருகி பலியாகினர். இரண்டு மாத காலத்திற்குள் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தப் படுகொலை சம்பவங்கள் சர்வதேச அரங்கிலும் எதிரொலித்தது. குறிப்பாக, பெரியண்ணன் நாடான அமெரிக்காவை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கியது. இந்நிலையில், நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்க ராணுவம் நேரடியாகக் களமிறக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நைஜீரிய அரசு கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதில் தவறி விட்டதாகவும், அமெரிக்கா இதைக் கைக்கட்டி வேடிக்கை பார்க்காது எனவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால், அமெரிக்கா வழங்கும் அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் களமிறங்கினால், கிறிஸ்தவர்களின் உயிரைப் பறித்த ஒவ்வொரு பயங்கரவாதியும் உயிரை விடும் சூழல் ஏற்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நைஜீரிய அரசே மேற்கொள்ள வேண்டும், செய்யத் தவறினால் அமெரிக்க ராணுவம் செய்து முடிக்கும் என்றும் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டை நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு திட்டவட்டமாக மறுத்துள்ளார். நைஜீரியா எப்போதும் மதசுதந்திரமும், சகிப்புத்தன்னையும் கொண்ட நாடு எனவும் கூறியுள்ளார்.

மத ரீதியிலான தாக்குதலைத் தனது அரசு ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நைஜீரியாவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய ஆட்சியை நிறுவத் துடிக்கும் போகோ ஹராம் பயங்கரவாத குழு, அதற்குத் தடையாக இருக்கும் கிறிஸ்தவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனைக் கண்டித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Donald TrumpChristians targeted in Nigeria: US President Trump warns!நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள்ட்ரம்ப் எச்சரிக்கை
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ஆட்டோகிராப்!

Next Post

ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies