உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் ரஷ்யாவின் தொடா் தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்று வருகிறது.
இரு நாடுகளும் எவ்வித சமரசமுமின்றி தொடர் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் செய்வதறியாது நிம்மதியிழந்து வாழ்ந்து வருகின்றனர்.
















