புகைக்கு "குட் பை" : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!
Jan 14, 2026, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 09:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் ஒட்டுமொத்த தலைமுறையையும் புகைப் பிடிக்காமல் தடுத்த முதல் நாடாக மாலத்தீவு உருவெடுத்துள்ளது. இது பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சுமார் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பவளத் தீவுகளால் ஆன ஒரு தீவுக்கூட்டமாக மாலத்தீவுகள் அமைந்துள்ளது. மாலே என்ற பகுதி இந்த நாட்டின் தலைநகரமாகச் செயல்பட்டு வருகிறது. வெறும் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர்தான் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை. அழகிய நீலக்கடலும், வெண்மணல் கடற்கரையும், ஆடம்பர ரிசார்டுகளுமே இந்த நாட்டின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இதன் காரணமாக உலகளவில் புகழ்  பெற்று விளங்கும் இந்நாட்டுக்கு, சுற்றுலாத்துறைதான் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கி வருகிறது.  அரசியல் ரீதியாக ஜனாதிபதி ஆட்சிமுறைப் பின்பற்றப்படும் இந்த நாட்டில், அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் ரீதியான பாதுகாப்பு மற்றும் பொதுசுகாதார நடைமுறைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தலைமுறையையும் புகைப் பிடிக்காமல் தடுத்த முதல் நாடாக மாலத்தீவு உருவெடுத்ததே அதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பின் பிறந்த எந்தவொரு நபரும், நவம்பர் 1-ம் தேதி முதல் புகையிலைப் பொருட்கள் வாங்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற சட்டத்தை அந்நாடு அமல்படுத்தியுள்ளது. அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் ஒரு பகுதியாக விளங்கும் இந்நாட்டில், ஜனாதிபதி முகமது மொயிஸ்ஸூவின் பொது சுகாதார முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான புதிய தலைமுறையைக் கட்டியெழுப்புவதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விற்பனையாளர்கள் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு முன் வாடிக்கையாளர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், புகையில்லா தலைமுறையை உருவாக்குவதுமே இந்தச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் என்றும் அந்நாட்டுச் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாலத்தீவுகள் மின் சிகரெட்டுகள் மற்றும் வேப்பிங் சாதனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் பயன்பாட்டை அனைத்து வயதினருக்கும் தடைச் செய்திருந்தது. இந்நிலையில், விதிக்கப்பட்ட சட்டத்தை மீறுவோருகு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் புகையிலை பொருட்களை விற்றால் 50 ஆயிரம் மாலத்தீவு ரூபியா வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல, தடைசெய்யப்பட்ட வேப்பிங் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, 5 ஆயிரம் மாலத்தீவு ருபியா அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நியூசிலாந்து இதுபோன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தாலும், அடுத்து வந்த புதிய அரசு அதனை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதேபோல, 2009-க்கு பின் பிறந்தவர்களுக்குப் புகை பிடிக்கத் தடை விதித்து இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சட்ட முன்மொழிவு, அந்நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதத்தில் இருந்து வருகிறது. இதனால், உலகளவில் இத்தகைய சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்திய ஒரே நாடாகத் திகழும் மாலத்தீவுகள், உலகுக்கு முன்னுதாரணமாக ஆரோக்கியமான புகையில்லா தலைமுறைக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

Tags: இந்திய பெருங்கடல்"Goodbye" to smoking: The breathtaking Maldivesமாலத்தீவுகள்புகை
ShareTweetSendShare
Previous Post

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

Next Post

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Related News

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies