இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!
Aug 7, 2026, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 09:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆதார் விவரங்களை மாற்றம் செய்ய இனி இ- சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.. மொபைல் போனிலேயே அப்டேட் செய்யும் வகையில் விரைவில் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க ஆதார் எண், வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவது வரை முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது.

இந்த ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்வது அவசியம். இன்றைய சூழலில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றவும், ஆதார் கார்டை அப்டேட் செய்யவும் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் பெயர், முகவரி, பாலினம் போன்ற அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும்.

ஆனால், ஆன்லைனில் விவரங்களை மாற்றுவது, படித்த இளைஞர்களுக்கே சற்று கடினமாகத் தான் பார்க்கப்படுகிறது. இதனை எளிமைப்படுத்த விரும்பிய இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பிரத்யேக செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் செயலி, ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க எளிதான, பாதுகாப்பான வழிமுறைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மொபைல் எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஸ்மார்ட்போன்களிலிருந்து நேரடியாகப் புதுப்பிக்க இந்தச் செயலி உதவும். எந்தவொரு சிறிய மாற்றங்களுக்கும் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்லும் அவசியத்தை இந்தச் செயலி நீக்குகிறது. பிறந்த தேதி, பெயர் அல்லது முகவரி போன்ற விவரங்களை மாற்றுவதற்கு இ சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், e-ஆதார் செயலி பயன்பாடிற்கு வந்து விட்டால் மக்கள், ஆதார் விவரங்களை வீட்டில் இருந்தே மாற்றிக் கொள்ளலாம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைச் சரிபார்க்கும் வகையிலும் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மோசடிக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

தற்போது பல்வேறு இடங்களில் ஆதார் தரவுகளை வைத்து மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஆதார் செயலி மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மோசடிகளைத் தடுக்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு, ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இ-ஆதார் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் சப்போர்ட் செய்யும் வகையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Indiaaadhar cardEverything is easy now: Aadhaar app to be launched soon
Share
Tweet
SendShare
Previous Post

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

Next Post

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies