இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!
Jun 22, 2026, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதார் விவரங்களை மாற்றம் செய்ய இனி இ- சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.. மொபைல் போனிலேயே அப்டேட் செய்யும் வகையில் விரைவில் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க ஆதார் எண், வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவது வரை முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது.

இந்த ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்வது அவசியம். இன்றைய சூழலில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றவும், ஆதார் கார்டை அப்டேட் செய்யவும் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் பெயர், முகவரி, பாலினம் போன்ற அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும்.

ஆனால், ஆன்லைனில் விவரங்களை மாற்றுவது, படித்த இளைஞர்களுக்கே சற்று கடினமாகத் தான் பார்க்கப்படுகிறது. இதனை எளிமைப்படுத்த விரும்பிய இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பிரத்யேக செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் செயலி, ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க எளிதான, பாதுகாப்பான வழிமுறைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மொபைல் எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஸ்மார்ட்போன்களிலிருந்து நேரடியாகப் புதுப்பிக்க இந்தச் செயலி உதவும். எந்தவொரு சிறிய மாற்றங்களுக்கும் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்லும் அவசியத்தை இந்தச் செயலி நீக்குகிறது. பிறந்த தேதி, பெயர் அல்லது முகவரி போன்ற விவரங்களை மாற்றுவதற்கு இ சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், e-ஆதார் செயலி பயன்பாடிற்கு வந்து விட்டால் மக்கள், ஆதார் விவரங்களை வீட்டில் இருந்தே மாற்றிக் கொள்ளலாம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைச் சரிபார்க்கும் வகையிலும் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மோசடிக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

தற்போது பல்வேறு இடங்களில் ஆதார் தரவுகளை வைத்து மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஆதார் செயலி மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மோசடிகளைத் தடுக்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு, ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இ-ஆதார் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் சப்போர்ட் செய்யும் வகையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Indiaaadhar cardEverything is easy now: Aadhaar app to be launched soon
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

Next Post

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies