லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

தொழிலதிபராக உருவெடுக்கும் கரூர் இளைஞர்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு, தைரியமாக FALOODA SHOP தொடங்கி, இன்று இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார்க் கரூரை சேர்ந்த பிரதீப் கண்ணன். யார் இந்த இளைஞர்? . விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் கண்ணன். இளம் வயதில் இருந்தே தொழில்துறையில் ஏதாவது சாதனைப் படைத்திட வேண்டும் என்ற வேட்கையுடன் வளர்ந்த இளைஞர். ஆனால், அதற்கான பொருளாதாரம் இல்லாததால், அவரது கனவு நிறைவேறுவதில் தடை ஏற்பட்டது.

சிறுவயதில் இருந்தே கொண்டிருந்த லட்சியத்துக்குப் பணம் தடையாக இருக்கிறதே என்றெல்லாம் பிரதீப் கண்ணன் துவண்டு விடவில்லை. கல்வியே பேராயுதம் என்பதில் நம்பிக்கைகொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார். அவரது நல்ல எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் ஏற்ப, சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

பெங்களூருவில் உள்ள ORACLE INDIA நிறுவனத்தில் OPERATIONS HEAD வேலை. லட்சக்கணக்கில் சம்பளம். காலை 9 மணிக்கு அலுவலகம் சென்றால், மாலை 5 மணிக்கு வீடு திரும்பி விடலாம். ஒரு சாமானிய மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் சௌகரியத்தையும் அவர்ப் பெற்றிருந்தார்.

ஆனால், உறுதியான மனப்பான்மைக் கொண்டவரான பிரதீப் கண்ணனுக்கு, தொழிலதிபராக வேண்டும் எனும் லட்சியத்தீ மனதில் கொளுந்து விட்டு எரிந்தது. அதற்காக நிறுவனத்தில் நன்கு உழைத்து, தனது ஊதியத்தை உயர்த்திக் கொண்டே சென்றார். அதே வேளையில், எந்தத் தொழிலில் வெற்றிக் கிட்டும் என ஒரு புறம் யோசித்துக் கொண்டே இருந்தார்.

ஒரு சமயத்தில் பிரதீப் கண்ணனின் நீண்ட கால கனவு நிறைவேறுவதற்கான சூழல் பிறந்தது. கையில் லட்சக்கணக்கில் பணமும், FALOODA SHOP தொடங்கலாம் என்ற ஐடியாவும் கிடைத்தது. இதற்கு மேல் என்ன வேண்டும்…. வேலையை விட துணிந்தார் பிரதீப் கண்ணன். நம் நாட்டில் ஒருவர் வேலையை விடுவது என்ன அவ்வளவு சாதாரணமான விஷயமா? குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு தரப்பிடம் இருந்தும் நெருக்கடி.

நீ ஜெயித்துவிட்டால் சரி… ஒரு வேளைத் தோற்றுவிட்டால் என்ன ஆகும்? யோசித்துப் பார்… வேலையை விட்டு விடாதே என்ற வார்த்தைகளே பிரதீப் கண்ணனின் காதுகளில் அதிகம் விழுந்தன. இதற்கெல்லாம் அந்த இளைஞர் அஞ்சவில்லை. துணிந்து வேலையை ராஜினாமா செய்தார்.

சொந்த ஊரான கரூருக்குத் திரும்பிய அவர், FALOODA SHOP தொடங்கினார். ஆரம்பத்தில் எல்லோரையும் போல் தடுமாற்றம். போட்ட கைக்காசு வருமா? என்று யோசிக்கும் அளவுக்கு படுதோல்வி. ஆனால், பிரதீப் கண்ணன் முயற்சித்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தொழில் ரகசியம் பிடிபட கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார் கரூர் இளைஞர்.

இன்று அவரது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்ன தெரியுமா? இந்தியா, துபாய் என 18 இடங்களில் FALOODA SHOP கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. தற்போது   ice-cream BRAND-ஐ உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பிரதீப் கண்ணன், நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

Tags: karurTn newsPradeep Kannanwho threw away his salary of one lakh! A Karur youth who is emerging as a businessmanபிரதீப் கண்ணன்
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

Next Post

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies