ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய "அதிர்ஷ்டசாலி" - வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!
Nov 4, 2025, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

Web Desk by Web Desk
Nov 4, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்  தப்பிய ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், பலரால் அதிர்ஷ்டசாலி எனக் கூறப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பேரழிவின் நினைவுகளும், சகோதரரின் இழப்பும் அவரைக் குடும்பத்திடம் இருந்து விலக்கித் தனிமைப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள அஹமதாபாத் அருகே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து 241 பயணிகளின் உயிரைப் பலிவாங்கியது. ஆனால் அந்த விபத்தில் சிக்கிய விஸ்வாஷ்குமார் ரமேஷ் என்பவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

லண்டனுக்குப் புறப்பட்ட AI 171 விமானம் தரையில் விழுந்து நொறுங்கியபோது, அதன் சிதைவுகளில் இருந்து விஸ்வாஷ்குமார் ரமேஷ் உயிருடன் வெளியே வந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்நிலையில், உலக மக்கள் விஸ்வாஷ்குமாரை “அதிர்ஷ்டசாலி” எனக் குறிப்பிட்டு கூறினாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அந்தப் பேரழிவின் நினைவுகள் அவருக்கு ஆறாவடுவாக மாறியுள்ளது.

விபத்தில் தனது சகோதரரை இழந்த விஸ்வாஷ்குமார், மீள முடியாத துயரில் மூழ்கி, தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். உடலளவில் ஏற்பட்ட காயங்கள் தன்னை வாகனம் ஓட்டவும், பணியாற்ற முடியாத நிலைக்கும் தள்ளியுள்ள நிலையில், தனது குடும்பத்தாரைப் பிரிந்து தனிமையில் தவித்து வருவதாக விஸ்வாஷ்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விபத்திற்குப் பின் உடல் மற்றும் மன ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்ட விஸ்வாஷ்குமார் ரமேஷ், தனது மனைவி மற்றும் மகனுடன் பேசுவதைத் தவிர்த்து லெஸ்டரில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இரவு முழுவதும் விபத்தின் நினைவுகள் தன்னை வாட்டுவதாகத் தெரிவித்துள்ள விஸ்வாஷ்குமார், தனது ஒட்டுமொத்த குடும்பமும் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மன அழுத்த நோய் எனப்படும் PTSD மனநிலைக் கோளாறு விஸ்வாஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர் இதுவரை அதற்கு உரிய சிகிச்சைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையால் விஸ்வாஷ்குமாருடைய குடும்ப தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பக்க பலமாக இருந்து வரும் சமூக ஆர்வலர்  சஞ்சீவ் படேல் மற்றும் ராட் சீகர் ஆகியோர், ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து போதுமான உதவிகள் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியில் உள்ள விஸ்வாஷ்குமார் மற்றும் குடும்பத்தாரை, ஏர் இந்தியா நிறுவனத்தார் நேரில் சந்தித்துத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விஸ்வாஷ்குமாருக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது அவரது உடனடி தேவைகளைப் பூர்த்திசெய்ய போதுமானதாக இல்லை என்றும் விஸ்வாஷ்குமாரின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், ஏர் இந்தியா நிறுவனமோ தங்கள் உயர் அதிகாரிகள் பலமுறைப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும், விஸ்வாஷ்குமாரின் குடும்பத்தைச் சந்திக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

விஸ்வாஷ்குமார் ரமேஷின் வாழ்க்கை அவருக்கு உயிர்  பிழைக்க அதிர்ஷ்டத்தை வழங்கியிருந்தாலும், அன்புக்குரிய சகோதரரைப் பறித்து, மன அழுத்தத்தில் பொராடும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தக் குடும்பம் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப தேவையான மனநலம் மற்றும் பொருளாதார ஆதரவுகளை வழங்குவது மட்டுமே தீர்வாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tags: air india flight"Lucky" survivor of Air India crash - suffering from stress and lonelinessஏர் இந்தியா விபத்துflight crashed
ShareTweetSendShare
Previous Post

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

Next Post

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

Related News

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தமிழகத்தைத் தலை குனிய வைத்திருக்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இடஒதுக்கீடு கொள்கை – அரசே முடிவெடுக்கும்!

உலகிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு!

குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம்!

கர்நாடகா : புலிக்குட்டிகளை தொட்டு படம் பிடித்த NGO மீது புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies