காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் - விதிமுறைகளை மீறி அராஜகம்!
Apr 30, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காவிரி ஆற்றங்கரையிலும், மின் மயானத்திலும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விதிமுறைகளை மீறி கொட்டப்படும் குப்பைகள் குறித்து பலமுறைப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 12 வார்டுகளை உள்ளடக்கிய பள்ளிப்பாளையம் நகராட்சியின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த சில சிலமாதங்களாகவே சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் காவிரி ஆற்றின் அருகே உள்ள கால்வாய் மற்றும் மயானத்தில் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கால்வாய்களில் கொட்டப்படும் குப்பைகளால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுத் துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நகராட்சி நல அலுவலரிடம் பலமுறைப் புகார் அளித்தும், தமக்கும் இந்தச் செயலுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாதது போல நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதோடு மயான பூமியில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றியுள்ள குடியிருப்புகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைக் கழிவுகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது குப்பைகளால் எரிப்பதில் இருந்து வெளிவரும் புகைக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் கொட்டப்படும் குப்பைகளை முறையாகத் திடக்கழிவு திட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறி, ஆற்றங்கரையிலும் மின் மயானத்திலும் கொட்டிவரும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: பள்ளிப்பாளையம் நகராட்சிநாமக்கல்அராஜகம்Garbage dumped on the banks of the Cauvery River - anarchy in violation of regulationsகொட்டப்படும் குப்பைகள்
ShareTweetSendShare
Previous Post

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

Next Post

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Related News

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies