என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!
Nov 4, 2025, 08:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

Web Desk by Web Desk
Nov 4, 2025, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலியின் பிரதான சாலைகளில் ஒன்றான கேடிசி நகர் மங்கம்மாள் சாலைக் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சாலைப் புகை மண்டலமாகக் காட்சியளிப்பதால் வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கே டி சி நகரில் உள்ள மங்கம்மாள் சாலை அப்பகுதியிலேயே அதிக மக்கள் வசிக்கக் கூடிய சாலையாக அமைந்திருக்கிறது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சேதமடைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கேடிசி நகர்க் காமாட்சி அம்மன் கோயிலில் தொடங்கி சீவலப்பேரி சாலைப் பாத்திமா கோயில் அருகே முடிவடையும் இந்த மங்கம்மாள் சாலைச் சுமார் 4 கிலோ மீட்டர் வரை நீளக்கூடிய சாலையாக இருக்கிறது.

கேடிசி நகர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள டீச்சர்ஸ் காலனி, ஐயப்பன் நகர், டார்லிங் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் பயன்படுத்தும் பிரதான சாலையான இந்தச் சாலை சேதமடைந்த நிலையில் இருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் இந்தச் சாலைகள் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது அப்பகுதிகளில் வணிகம் செய்து வரும் வியாரிபாரிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்தப் பகுதியை சீரமைத்துத் தர வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், தங்களின் கோரிக்கையைக் கேட்க கூட தயாராக இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிப்போனச் சாலைவசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது தங்களின் கடமை என்பதை மறந்துவிட் மக்கள் பிரதிநிதிகளுக்கு அடுத்துவரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Roadதிருநெல்வேலிWill this misery end? : Sadness due to the bumpy and potholed roadகேடிசி நகர் மங்கம்மாள் சாலை
ShareTweetSendShare
Previous Post

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

Next Post

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

Related News

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தமிழகத்தைத் தலை குனிய வைத்திருக்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இடஒதுக்கீடு கொள்கை – அரசே முடிவெடுக்கும்!

உலகிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு!

குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம்!

கர்நாடகா : புலிக்குட்டிகளை தொட்டு படம் பிடித்த NGO மீது புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies