என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!
Jan 14, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலியின் பிரதான சாலைகளில் ஒன்றான கேடிசி நகர் மங்கம்மாள் சாலைக் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சாலைப் புகை மண்டலமாகக் காட்சியளிப்பதால் வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கே டி சி நகரில் உள்ள மங்கம்மாள் சாலை அப்பகுதியிலேயே அதிக மக்கள் வசிக்கக் கூடிய சாலையாக அமைந்திருக்கிறது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சேதமடைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கேடிசி நகர்க் காமாட்சி அம்மன் கோயிலில் தொடங்கி சீவலப்பேரி சாலைப் பாத்திமா கோயில் அருகே முடிவடையும் இந்த மங்கம்மாள் சாலைச் சுமார் 4 கிலோ மீட்டர் வரை நீளக்கூடிய சாலையாக இருக்கிறது.

கேடிசி நகர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள டீச்சர்ஸ் காலனி, ஐயப்பன் நகர், டார்லிங் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் பயன்படுத்தும் பிரதான சாலையான இந்தச் சாலை சேதமடைந்த நிலையில் இருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் இந்தச் சாலைகள் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது அப்பகுதிகளில் வணிகம் செய்து வரும் வியாரிபாரிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்தப் பகுதியை சீரமைத்துத் தர வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், தங்களின் கோரிக்கையைக் கேட்க கூட தயாராக இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிப்போனச் சாலைவசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது தங்களின் கடமை என்பதை மறந்துவிட் மக்கள் பிரதிநிதிகளுக்கு அடுத்துவரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Roadதிருநெல்வேலிWill this misery end? : Sadness due to the bumpy and potholed roadகேடிசி நகர் மங்கம்மாள் சாலை
ShareTweetSendShare
Previous Post

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

Next Post

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies