ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!
Nov 6, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

Web Desk by Web Desk
Nov 6, 2025, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயிலில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளின் வசதிக்காகச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் M -UTS சகாயக் எனும் புதிய திட்டத்தைத் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்குப் பேருதவியாக அமைந்திருக்கும் இந்தத் திட்டம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

பயணிகளுக்குக் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணத்தைத் தருவதுதான் ரயில்வே சேவையின் முக்கியமான நோக்கம். அத்தகைய ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காகவும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் இணையதளத்தின் மூலமாகவும் செயலி மூலமாகவும் டிக்கெட் பெறும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருந்தது.

பயணிகளின் போக்குவரத்து சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் தொடங்கியிருப்பது தான் இந்த M-UTS சகாயக் திட்டம்… தெற்கு ரயில்வேயின் இந்தப் புதிய திட்டம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்கெட் கவுண்டர்களுக்கு அருகிலேயும், பயணிகள் அதிகமாக நடமாடும் இடத்திலும் நிற்கும் இந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரிடம், நாம் செல்லும் இடத்தையும், தொலைபேசி எண்ணையும் கூறினால் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டை எளிமையாகப் பெற முடியும். இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டிக்கெட் கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதோடு, பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தத் திட்டம் தங்களது பயணத்தை எளிமையாக்க உதவுவதாகப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த M-UTS சகாயக் திட்டம் நாடு முழுவதும் உள்ள 5 முக்கியமான ரயில்நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

இந்தத் திட்டம் விரைவில் அனைத்து ரயில்நிலையங்களிலும் செயல்படுத்த இருப்பதால் பண்டிகை காலங்களில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குப் பேருதவியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

பயணிகளுக்குக் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணத்தைத் தருவதுதான் ரயில்வே சேவையின் முக்கியமான நோக்கம். அத்தகைய ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காகவும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் இணையதளத்தின் மூலமாகவும் செயலி மூலமாகவும் டிக்கெட் பெறும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருந்தது.

பயணிகளின் போக்குவரத்து சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் தொடங்கியிருப்பது தான் இந்த M-UTS சகாயக் திட்டம். தெற்கு ரயில்வேயின் இந்தப் புதிய திட்டம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களுக்கு அருகிலேயும், பயணிகள் அதிகமாக நடமாடும் இடத்திலும் நிற்கும் இந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரிடம், நாம் செல்லும் இடத்தையும், தொலைபேசி எண்ணையும் கூறினால் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டை எளிமையாகப் பெற முடியும்.

இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிக்கெட் கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதோடு, பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தத் திட்டம் தங்களது பயணத்தை எளிமையாக்க உதவுவதாகப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த M-UTS சகாயக் திட்டம் நாடு முழுவதும் உள்ள 5 முக்கியமான ரயில்நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் விரைவில் அனைத்து ரயில்நிலையங்களிலும் செயல்படுத்த இருப்பதால் பண்டிகை காலங்களில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குப் பேருதவியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

Tags: Indian RailwayBuying train tickets is EASY: M-UTS Sahayya scheme is coming to help passengersரயில் டிக்கெட் எடுப்பது EASYM -UTS சகாயக் திட்டம்
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டம் – உளவுத் துறை எச்சரிக்கை!

Next Post

சீன ஆதரவு கொள்கையுடைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : இந்தியாவுக்கு நெருக்கடி?

Related News

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 1 மணி நிலவரப்படி 42.31 % வாக்குகள் பதிவு!

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS இஷாக் கடற்படையுடன் இணைப்பு!

அஜித்தின் ஏகே 64 படத்தில் முன்னணி நடிகர்கள்!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

மெரினா கடலில் இறங்கி போராட்டம் – தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது வழக்குப்பதிவு!

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீயின்பாமை முத்தமிட முயன்ற மதுபோதை நபர்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

அல்லு அர்ஜுனின் படத்தில் இணைந்த சாய் அபயங்கர்!

அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்த முகமது யூனுஸ் அரசு மீது விமர்சனம்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை ஓட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies