பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!
Aug 5, 2026, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

அரசின் பொது பாதுகாப்பு நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

Murugesan M by Murugesan M
Nov 6, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 3 மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல நக்சலைட்டான சுனிதா ஓயம், தனது ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளார்.

ஏறக்குறைய 5 அடி உயரம் கொண்ட 23 வயது பெண்மணியான சுனிதா ஓயம் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு பிரபல நக்சலைட் ஆவார். மாலாஜ்காண்ட் – தர்ரேகாசா தளத்தின் AREA COMMITTEE உறுப்பினராகச் செயல்பட்டு வந்த இவரது தலைக்கு 3 மாநில போலீசாரும் 14 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நவீன ரக INSAS துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு நேரடியாகப் பாலாகட் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த சுனிதா ஓயம், அங்கிருந்த பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்த சுனிதா, தனது குடும்பத்தினருடனான தொடர்பை இழந்ததையடுத்து பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாகச் சரணடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்னர் சுனிதா ஓயமை நக்சல் இயக்கத்தினர் கடத்திச் சென்றதாக அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நக்சல் இயக்கத்தினரால் மூளைச்சலவை செய்யப்பட்ட சுனிதா, நக்சல் குழுவின் பாதுகாப்பு படையில் இணைந்து AREA COMMITTEE உறுப்பினர் பொறுப்பிற்கு உயர்ந்திருந்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி சரணடைய முடிவெடுத்த சுனிதா ஓயம், தனது துப்பாக்கி மற்றும் உடைமைகளுடன், HAWK FORCE-ன் முகாமை அடைந்தார்.

அப்போது அவரது துப்பாக்கி, 3 மேகசின்கள், 30 குண்டுகள் மற்றும் ஒரு UBGL ஷெல் ஆகியவற்றை பாதுகாப்பு படையினரிடம் அவர் ஒப்படைத்தார். இந்நிலையில், சரணடைந்த சுனிதாவுக்கு உதவித்தொகையாக 20 லட்சமும், வீட்டு உதவிக்காக ஒன்றரை லட்சமும், திருமண உதவிக்காக 50 ஆயிரமும், கல்வி உதவிக்காக ஒன்றரை லட்சமும் வழங்க மத்தியப்பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் செயல்பாட்டில் இருந்த நக்சலைட் ஒருவர் பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாகச் சரணடைவது, கடந்த 33 ஆண்டுகளில் இதுவே முதல் முறை எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பொது பாதுகாப்பு நடவடிக்கையின் வெற்றியாகக் கருதும் மாநில அரசு, பிற நக்சல் உறுப்பினர்களையும் ஆயுத போராட்டத்தைக் கைவிட்டு விரைந்து சரணடைய அறிவுறுத்தியுள்ளது.

Tags: மத்தியப்பிரதேசம்Naxalite surrenders voluntarily to security forcesசரணடைந்த நக்சலைட்Naxalite surrenderபாதுகாப்பு படை
Share
Tweet
SendShare
Previous Post

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies